திருப்பூர் ஜூலை 25- சர்வதேச வர்த்தகம் அமெரிக்க டாலரிலேயே அதிக அளவில் நடக்கி றது. அதனால் இந்திய ரூபாய்க்கு நிக ரான டாலர் மதிப்பில் மாற்றங்கள் நமது நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக் குமதியில் தாக்கத்தை ஏற்படுத்துகி றது.நடப்பு ஆண்டு ஜனவரி இறுதி வரை 74.65 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் 76 ரூபாயை கடந்தது. தொடர்ந்து அதிகரித்து நேற்று (25ஆம் தேதி) 79. 78 ரூபாயை எட்டிப்பிடித்தது. டாலர் மதிப்பு உயர்வு, திருப்பூர் பின்ன லாடை உற்பத்தி துறையினருக்கு சாதகம், பாதகம் இரண்டையும் கொடுக்கிறது. சாதகங்களைவிட பாதகமே அதிகம் என்பதால் டாலர் மதிப்பு உயர்வு தொழில் துறையின ரைப் பாதித்துள்ளது. இது குறித்து டெக்பா சங்க தலை வர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:- திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங் கள் துணி, பிரின்டிங் இங்க், அக்சச ரீஸ், நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என ஆடை உற்பத்தி சார்ந்த மெஷினரிகளை உலகளா விய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. ஐரோப்பா தவிர மற்ற நாடுகளுடனான வர்த்தகம் டாலரி லேயே நடக்கிறது.
இப்போது டாலர் மதிப்பு உயர்வு திருப்பூரில் ஆடை உற்பத்தி சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங் களை மிகவும் பாதிக்க செய்கிறது.இறக்குமதி மூலப்பொருட்களின் விலை உயர்வால் பிரின்டிங் போன்ற ஆடைகளின் மதிப்பு கூட்டுதல் செய் வதற்கான செலவினம் அதிகரிக்கி றது.வெளிநாடுகளிலிருந்து அதி நவீன எந்திரங்களை இறக்குமதி செய்வதும் சிக்கலாகிறது என்று கூறி னார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதா வது:- டாலர் மதிப்பு உயர்வால் திருப் பூர் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு சாதகமான சூழலாக தெரிந்தாலும். இந்த நிலை நீடிக்காது. ஏற்கனவே ஆர்டருக்கான ஆடை தயாரிப்பு, பின்னலாடை ஏற்றுமதியாளர்க ளுக்கு சற்று கூடுதல் லாபத்தை பெற் றுத்தரும். ஆனால் புதிய ஆர்டர் வழங்கும்போது, டாலர் மதிப்பு உயர் வுக்கு ஏற்ப ஏற்றுமதி ஆடை விலையை வெளிநாட்டு வர்த்தகர் கள் குறைத்து விடுவர். இதனை ஏற் றுக்கொண்டுதான் ஆகவேண்டும். லேபிள், பட்டன், ஜிப் போன்ற ஏற்று மதி ஆடைகளின் இணைக்கும் அக்ச சரீஸ்களை அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டிய கட் டாயம் உள்ளது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் பின் னலாடை நிறுவனங்கள் அக்சசரீஸ் இறக்குமதிக்கு அதிக தொகை செல விட வேண்டியுள்ளது. டாலர் மதிப்பு உயர்வு, பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு குறுகிய கால நன்மையை விட தலைவலிதான் அதிகம் என்று கூறினார்.