districts

திருப்பூரில் எம்பிபிஎஸ் படித்துவிட்டு எம்.டி என விளம்பரப்படுத்திய மருத்துவர்

திருப்பூர், டிச.13- எம்பிபிஎஸ் மட்டுமே படித்துவிட்டு எம்.டி (குழந்தைகள் நலம்) மருத்துவர் என்று விளம்பரப்படுத்தி மருத்துவம் பார்க்கப்பட்டதாகக் கூறி கேலக்ஸி மருத்துவமனை மூடப்பட்டது. திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள கேலக்ஸி மருத்துவமனையில் செவ்வாயன்று திருப்பூர் மாவட்ட இணை இயக்குநர் மருத்துவம் மற்றும்  ஊரக நலப் பணிகள் கனகராணி ஆய்வு  மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது  அங்கு பெறப்பட்டிருந்த டிஎன்சிஇஎ சான்றிதழில் மருத்துவர் சதீஷ்குமார் எம் பிபிஎஸ் எம்டி (குழந்தைகள் நலம்) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால்  அங்கு மருத்துவர் பார்த்திபன் என்பவர்  நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துக்  கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்த  போது அவர் கடந்த ஐந்து மாதங்க ளுக்கு முன்னால் தான் அந்த மருத்துவம னையில் பணியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார். அங்கு மேலாளராக பணி புரிந்து வந்த ஜெய்லானி என்பவரிடம் விசாரித்தபோது, கடந்த ஐந்து வருடங் களில் ஐந்து மருத்துவர்கள் அங்கு பணி யிலிருந்ததாக தகவல் தெரிவித்தார். அந்த மருத்துவர்கள் பற்றி ஏன் டிஎன் சிஇஎ சான்றிதழில் தெரிவிக்கவில்லை என்று கேட்ட போது, அவர் முறையாக பதில் ஏதும் அளிக்கவில்லை.  அதனைத் தொடர்ந்து அந்த மருத்து வமனையின் உரிமையாளர் மருத்துவர்  சதீஷ்குமார் என்பவரை தொலைப்பேசி யில் அழைத்து கேட்டபோது, அவர் 2018  ஆம் ஆண்டு சென்னை சென்று விட்டதா கவும் அதன்பின் வேறு மருத்துவரைக் கொண்டே அந்த மருத்துவமனையை  நடத்துவதாகவும் தெரிவித்தார். அவரி டம் நீங்கள் இல்லாத போது உங்கள் பெயரில் எப்படி டிஎன்சிஇஎ பெற்றீர்கள் என்று கேட்டதற்கு அவர் சரியான பதில் சொல்லவில்லை. தாங்கள் எம்பிபிஎஸ் மட்டுமே படித்துவிட்டு எப்படி எம்.டி (குழந்தைகள் நலம்)  என்று விளம்பரப்படுத்தியுள்ளீர்கள் என்று கேட்டதற்கு அவர் நான் எம்பி பிஎஸ் மட்டுமே முடித்துள்ளேன் என்றும்  எம்டி படிக்கவில்லை என்றும் தெரிவித் தார். பிறகு எப்படி எம்டி படிப்பை  விளம்பரப்படுத்தினீர்கள். தற் போதுள்ள மருத்துவரின் பெயரை டிஎன் சிஇஎ ஏன் சேர்க்கவில்லை என்ற கேள் விக்கும் முறையான பதில் அளிக்க வில்லை. இதைத்தொடர்ந்து, நேரில் வந்து இணை இயக்குநரிடம் விளக்கம்  அளிக்கும் வரை  மருத்துவமனையை நடத்தக் கூடாது என அறிவுறுத்தி மருத் துவமனை மூடப்பட்டது.