திருப்பூர், மார்ச் 14 - திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பரு வாய் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு நிலச் சீர்திருத்தச் சட்டத்தில் நிலம் பிரித்து வழங்கி உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் முறையாக அளந்து தராமல், அந்த உத்தரவை ரத்து செய்து விட்டதாக கூறி, நிலத்தை அவர்களுக்குத் தராமல் வருவாய் துறையினர் தனியாருக்கு சாதக மாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்லடம் வட்டம், பருவாய் ஊராட்சி கும ரன் காலனியைச் சேர்ந்த நாகராஜ் தலைமை யில் பொது மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரகத்துக்கு வருகை தந்து கோரிக்கை மனு அளித்தனர் அதன் பிறகு அவர்கள் கூறியதாவது: பருவாய் கிராமத்தில் வசிக்கும் நாங்கள் அன்றாட கூலி வேலை செய்து பிழைத்து வரு கிறோம். கடந்த 2001ஆம் ஆண்டு இங்குள்ள 45 பயனாளிகளுக்கு நிலச் சீர்திருத் தச் சட்டத்தின் அடிப்படையில் விவசாய வேலை செய்வதற்காக தலா 50 சென்ட் வீதம் நிலம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த நிலத்தை பயனாளிகளுக்கு அளந்து வழங் கப்படவில்லை. இது தொடர்பாக இந்த மக்கள் தொடர்ச் சியாக அரசு நிர்வாகத்துக்கு மனுக் கொடுத்து வந்தனர். எனினும் ஆண்டுக்க ணக்கில் அரசு நிர்வாகம் இதற்கு உரிய நடவ டிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு இவர்களுக்கு நிலச் சீர்திருத்தச் சட்டப்படி வழங்கப்பட்ட நில உரிமைக்கான ஆணை ரத்து செய்யப்படுவ தாக தெரிவிக்கப்பட்டது. நிலச் சீர்திருத்தச் சட்டப்படி விவசாய வேலைக்கு பயனாளிக்கு வழங்கப்பட்ட நிலத்தை ரத்து செய்வதாக இருந்தால் முறைப்படி அங்கு விசாரணை நடத்தி, பய னாளிக்கு முறையாக தெரிவித்த பிறகு தான் ரத்து செய்ய முடியும். ஆனால் அத்த கைய விசாரணை எதுவும் நடத்தப்பட வில்லை. ரத்து செய்வது குறித்து முன்கூட் டியே தகவலும் தெரிவிக்கப்படாமல் திடீ ரென ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்த னர். இந்த நிலையில் பயனாளிகளுக்கு உரிய நிலத்தை அளந்து கொடுக்க வேண் டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். கடந்த நான்கைந்து ஆண்டுகளில் இது தொடர்பாக ஏராளமான முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மாவட்ட பழங்குடியினர் மற்றும் ஆதிதிரா விடர் நல அலுவலர் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியருக்கு எழுதிய கடிதத்தில் பரு வாய் பயனாளிகளுக்கு நிலம் அளந்து தரப்ப டாதது குறித்தும், தனி நபர்கள் ஆக்கிர மிப்பு செய்திருப்பதாகவும் தெரிவித்தி ருந்தார். ஆனால் அதன் பிறகும் வருவாய் கோட்டாட்சியர் அந்த இடத்தை அளந்து தருவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அதேசமயம் மேற்படி இடம் தனியார் வீட் டுமனை விற்பனை நிறுவனத்துக்கு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு அச்சம யம் பருவாய் ஊராட்சித் தலைவராக இருந்த வர் உடந்தையாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. சட்டப்படி நியாயமாக நடக்க வேண்டிய அதிகாரிகள் ஏழை மக்களை புறக்கணித்து விட்டு, கையூட்டுப் பெற்றுக் கொண்டு சட்டத் துக்குப் புறம்பாக தனியார் வீட்டுமனை விற் பனை நிறுவனத்துக்குச் சாதகமாக நடந்து கொண்டிருக்கின்றனர் என்றும் உள்ளூர் மக் கள் குற்றம் சாட்டுகின்றனர். 20 ஆண்டு காலமாக இந்த இடத்திற்காக பருவாய் பட்டியலின மக்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர். நூறு முறைக்கு மேல் மனுக் கொடுத்தும் அதிகாரி கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர் என்று அந்த மக்கள் ஏமாற்றத்துடன் கூறுகின் றனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனியார் நிறுவனம் கையகப்ப டுத்தி வீடுகள் கட்டி விற்பனை செய்வதற்கு உடந்தையாக அரசு அதிகாரிகள் செயல்பட் டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து மாநில அரசு உயர்மட்ட விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டுள்ள மக்க ளுக்கு உரிய நிலம் கிடைக்கவும், தவறி ழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்றும் பருவாய் மக்கள் கூறு கின்றனர். மேலும் இப்பிரச்சனையில் நீதி மன்றத்தை நாடவும் அவர்கள் தயாராகி வரு வதாகத் தெரிவித்தனர்.