districts

img

சென்னைக்கு தூய்மைப் பணியாளர்கள் அனுப்பி வைப்பு

சேலம், அக்.17- சென்னை மாநகராட்சியில் மழை யால் ஏற்பட்ட கூடுதல் பணிச்சுமை யினை குறைக்கும் வகையில், சேலத் திலிருந்து தூய்மைப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் வியாழனன்று அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சி எல்லைக் குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்ட கூடுதல் பணிச் சுமையினை குறைக்கும் பொருட்டு,  சேலம் மாநகராட்சியில் பணிபுரியும்  தூய்மை அலுவலர் மற்றும் தூய்மை  ஆய்வாளர் தலைமையில் 200 தூய்மைப்  பணியாளர்கள் மற்றும் 10 மேற்பார்வை யாளர்களை நான்கு அரசு பேருந்துக ளில் வியாழனன்று அனுப்பி வைக்கப் பட்டனர். மேலும், தூய்மைப் பணியாளர் கள் அங்கு பணிகளை மேற்கொள்ள  தேவையான ரெயின் கோட், கையுறை,  ரிப்லேக்ஸ் ஜாக்கெட் போன்ற பாது காப்பு உபகரணங்களும், மண்வெட்டி, சட்டி, கொடுவாள், சவுல், சாக்கடை மண்வெட்டி போன்ற தளவாட பொருட் களும், பணியாளர்கள் தங்குவதற்கு அடிப்படைத் தேவைகளான பாய்,  பெட்ஷீட், துண்டு போன்ற பொருட்க ளும், அங்கு ஓரிடத்தில் இருந்து மற் றொரு இடத்திற்கு பொருட்களை எடுத்து செல்வதற்காக நான்கு டிப்பர் லாரிகளும் வியாழனன்று அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிகழ்வின்போது சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், ஆணையர் ரஞ்ஜீத் சிங், துணை  மேயர் மா.சாரதாதேவி, அஸ்தம்பட்டி  மண்டலக்குழுத் தலைவர் செ.உமா ராணி ஆகியோர் உடனிருந்தனர்.