districts

img

நுழைவு கட்டணத்தில் மோசடி- வனவர் பணியிடை நீக்கம் - ரூ.35 லட்சம் பறிமுதல்

கோவை, ஜன. 21- கோவை குற்றாலம் செல்லும்  சுற்றுலா பயணிகளிடம் வாங் கப்படும் நுழைவு கட்டணத்தில் பல  லட்சம் மோசடியில் ஈடுட்டதாக வனவர் பணியிடை நீக்கம் செய் யப்பட்டார், அவரிடம் இருந்து ரூ. 35 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டது. கோவை குற்றாலம் அருவிக்குச்  செல்ல, சூழல் சுற்றுலா மேம்பாட் டிற்காக வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூல் செய் யப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  நுழைவு கட்டணம் செலுத்தி சீட்டு களை வழங்க கொடுக்கப்பட்ட இயந் திரத்தை வைத்து பல லட்சம் ரூபாய்  மோசடி செய்ததாக புகார் எழுந்தது.   இதையடுத்து, மாவட்ட வனத்துறை  அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் விசார ணையில் போளுவாம்பட்டி வனச்சரகத்தில்  வனவராக பணியாற்றி வரும் ராஜேஷ் குமார் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.  மேலும், முன்னாள் போளுவாம்பட்டி சரக  ரேஞ்சர் சரவணன் உதவியுடன் கடந்த 2021 ல்  இருந்து போலி சீட்டுகளை வழங்கி பல லட்சம்  மோசடி செய்தது தெரியவந்தது. ராஜேஷ் குமார் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட  வன அலுவலர் அசோக்குமார் உத்தர விட்டுள்ளார், மேலும், அவரிடமிருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.