districts

img

மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதல்வர் காணொலி மூலம் கலந்துரையாடல்

கோவை, ஏப்.16- மின் இணைப்பு பெற்ற விவசாயி களுடன் முதல்வர் காணொலி மூலம் கலந்துறையாடினார். தமிழகம் முழுவதும் விவசாயிக ளுக்கு ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. திருப்பூர், கோவை மாவட்டங்களில் 3582 விவ சாயிகளுக்கு மின் இணைப்பு வழங் கப்பட்டது. இந்நிலையில், நடப்பு  ஆண்டில் விவசாய மின் இணைப்பு பெற்ற 1 லட்சம் விவசாயிகளிடம் இணைய வழியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்திலிருந்து நடைபெற்றது.   இதையொட்டி, கோவை சரவ ணம்பட்டி, கேஜிஐஎஸ்எல் கல்லூரி  வளாகத்தில் விவசாயிகளுடனான காணொளி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன், மாநகராட்சி மேயர் கல்பனா,  துணைமேயர் வெற்றிச்செல்வன் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரி கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். உடுமலை  உடுமலை தேஜஸ் மஹால், பிஎஸ்எம் மஹால் உட்பட  மின்பகிர் மான வட்டத்தில் 5 இடங்களில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், விவசாய மின் இணைப்பு பெற்ற பயனாளிகள் பங்கேற்று முதல்வருடன் கலந்து ரையாடினர். உடுமலை தேஜஸ் மஹாலில் நடைபெற்ற  காணொலி நிகழ்சியில் மேற்பார்வை பொறி யாளர் ராஜாத்தி, செயற்பொறியா ளர் அறம் வளர்தான் உள்ளிட்ட மின் வாரிய அதிகாரிகள் கலந்து கொண் டனர். மேலும், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ். ஆர்.மதுசூதணன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ் ணன், உடுமலை நகர்மன்ற தலைவர் மத்தீன் மற்றும் மின் இணைப்பு  பெற்ற விவசாயிகள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.