நாமக்கல், ஜன.2- ராசிபுரத்தில் மாற்றுத்திறனாளி கள் சங்க தாலுகா குழு அமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள வெண்ணந்தூர் தனியார் மண்டபத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க தாலுகா குழு அமைப்பு மாநாடு நடை பெற்றது. கூட்டத்திற்கு சங்க நிர்வாகி சுந்தர் தலைமை ஏற்றார். அஞ்சலி தீர்மானத்தை துணைத்தலைவர் யசோதா முன்வைத்தார். தங்கராஜ் வரவேற்புரை ஆற்றினார். சங்க நிர்வாகி கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். மும்தாஜ் கார்த்திக் தீர்மா னங்களை முன்மொழிந்தனர். மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன் மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். இதில், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரமாக உள்ள 100 நாள் வேலையை முழுமையாக தொடர்ச் சியாக அனைவருக்கும் வழங்க வேண் டும். வீட்டுமனை இல்லா மாற்றுத்திற னாளி குடும்பங்களுக்கு வீட்டுமனை நிலம் வழங்க வேண்டும், நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நிரந்தரமாக நியமிக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக தொழில் தொடங்க அனைத்து வங்கி கிளைகளும் கட னுதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து என்பி ஆர்டி அகில இந்திய பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி நிறைவுரை யாற்றினார். மாநாட்டில் தாலுகா குழு தலைவராக தங்கராஜ், செயலாள ராக சுந்தர், பொருளாளராக செல்வம் பாள், முருகேசன், நடேசன், செல்வ ராஜ், துணைச்செயலாளராக மும் தாஜ் சங்கர், சச்சின், ராஜு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், திர ளான மாற்றுத்திறனாளிகள் பங் கேற்றனர்.