districts

தொழிற்சாலையை மூடுவதை கைவிடுக

உதகை, டிச.3- சேரங்கோடு டேன் டீ தொழிற் சாலையை மூடுவதை கைவிடக் கோரி தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு டேன் டீ தேயிலை தொழிற்சாலையில் 40  நிரந்தர தொழிலாளர்கள், 40 தற் காலிக தொழிலாளர்கள் என மொத்தம் 80 தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். தற்போது இந்த தொழிற்சாலைக்கு பச்சை  தேயிலை வரத்து குறைந்து உள்ளது. இதனால் தொழிற் சாலைக்கு வரும் பச்சை தேயிலை  நெல்லியாளம் மற்றும் பாண்டி யார் தேயிலை தொழிற்சாலை களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேரங்கோடு டேன் டீ தொழிற்சாலை திடீரென மூடப்பட்டது. இதனால் நிரந்தர தொழிலாளர்கள் தேயிலை தோட் டங்களில் பணியாற்ற வேண்டும் என டேன் டீ நிர்வாகம் உத்தரவிட்ட தாக கூறப்படுகிறது.

மேலும்,  தற்காலிக தொழிலாளர்கள் பணி யில் இருந்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழக்கும்  சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சேரங்கோடு டேன் டீ தொழிற்சாலை நிரந்தர மாக மூடப்படுவதாக தகவல்  பரவியது. இதனால் அதிர்ச்சிய டைந்த தொழிலாளர்கள் தேயிலை  தொழிற்சாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் டேன் டீ தொழிற் சாலையை மூடுவதை நிர்வாகம் கைவிட வேண்டும். நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களை தொழிற்சாலையில் பணிபுரிய உத்தரவிட வேண்டும். தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட முழக் கங்கள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த டேன்  டீ கோட்ட மேலாளர் புஷ்பராணி தலைமையிலான அதிகாரிகள்,  தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அப்போது தொழிற்சாலை பரா மரிப்பு பணிக்காக 15 நாட்கள் மூடப் படுவதாகவும், பணி முடிந்த  பின்னர் நிரந்தர, தற்காலிக தொழி லாளர்களுக்கு பணி வழங்கப்படும். அதுவரை தேயிலை தோட்டங் களில் அனைவரும் பணிபுரியலாம்  என தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து தொழிலாளர்கள் போராட் டத்தை கைவிட்டு, கலைந்து சென் றனர்.