ஈரோடு, ஜூலை 5- அகாதெமி செயல்பட அனுமதி வழங்காததைக் கண்டித்து ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கி சுடும் வீரர் புதனன்று தர்ணாவில் ஈடு பட்டார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள காடபாளையம் கிராமத் தைச் சேர்ந்தவர் இலக்கியச்செல்வன். தேசிய அளவில் துப்பாக்கி சுடும் விளை யாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக் கங்களை வென்றுள்ளார். இதனி டையே ஈரோட்டில் துப்பாக்கி சுடும் விளையாட்டு வீரர்களுக்காக, கடந்த 2018 ஆம் ஆண்டு அகாதமி ஒன்றை தொடங்கினார். இந்த அகாதெமி பதிவு செய்யப்பட்டு, தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட் டுள்ளது. ஆனால், இந்த அகாதமி செயல் பாட்டிற்கு வரவில்லை என கூறப்படு கிறது. இதற்கு அதிகாரிகள் ஒத்து ழைக்கவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும், அவரின் துப்பாக்கி உரிமத்தை கடந்த 10 மாதங்களாக புதுப்பிக்காமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதா கவும் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், புதனன்று காலை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இலக் கியச்செல்வன் திடீரென அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடு பட்டார். இதுகுறித்து அவர் கூறுகை யில், மதுரையில் ஜூலை 11 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மாநில அள விலான துப்பாக்கி சுடும் போட்டி நடை பெற உள்ளது. இப்போட்டியில் ஈரோடு மாவட்டத்திலிருந்து அகாதமி சார்பில் வீரர், வீராங்கனைகளை அனுப்ப வேண் டும். அதற்கு உடனடியாக அகாதமியை புதுப்பித்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். மேலும் எனது விளை யாட்டு வாழ்க்கையை சீர்குலைக்க அதி காரிகள் முயற்சிக்கின்றனர். அந்த அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றார். அப்போது அங்கு வந்த சூரம்பட்டி காவல் ஆய்வாளர் கோமதி, தர்ணா வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயற்சி செய்தார். இதனால் இரு தரப் பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது. இதன்பின் அங்கு வந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்சியரை சந்தித்து பிரச்னைகளை தீர்க்கலாம் என தெரிவித்து, இலக்கியச் செல்வனை அழைத்துச் சென்றனர்.