கோபி, ஆக.31- ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதிக்குட்பட்ட டி.என்.பாளையம் பகுதிகளான வாணிப்புத்தூர், கள் ளிப்பட்டி, பெருமுகை, கணக்கம் பாளையம், கொண்டையம்பாளை யம், உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா வெள்ளியன்று நடை பெற்றது. வாணிப்புத்தூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டி டம் கட்டுவதற்கும், கீரின்பார்க் பகுதியில் ரூ. 42 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க அடிக்கல் நாட்டி பணிகளை அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் பங் கேற்று துவக்கிவைத்தார். முன்னதாக, வாணி புத்தூர் பேருந்து நிறுத்ததில் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கு டையை திறந்து வைத்தார். இதேபோன்று, கொண்டையம்பாளையம் ஊராட்சி, கணக் கம்பாளையம் ஊராட்சி, கள்ளிப்பட்டி, பெரு முகை உள்ளிட்ட பகுதியில் நடைபெற்று முடிந்த திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட் டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வாணிப்புத்தூர் பேரூ ராட்சி செயல் அலுவலர் ராஜவிஜயகணே சன், பேரூராட்சி துறை உதவிபொறியாளர் கணேசன், ஒன்றியச் செயலாளர் சிவபாலன், பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.சிவராஜ், துணைதலைவர் கருப்புசாமி, தகவல் தொழில்நுட்ப அணி நாகராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.