districts

img

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

நாமக்கல், நவ.13- குமாரபாளையத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேர ணியில் 300க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை பொதுமக் கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், நாமக் கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தனி யார் பள்ளி மாணவ, மாணவிகளின் சைக்கிள் பேரணி புதனன்று நடைபெற்றது. டெங்கு  கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் வகை யில் வீடுகளில் தண்ணீர் தொட்டிகளை திறந்து வைக்கக்கூடாது. வீடுகள், அலுவலகம் ஆகியவற்றில் டெங்கு கொசுக்கள் இல்லா மல் இருக்க பிளாஸ்டிக் நெகிழி கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். சுகாதாரத்து டன் இருக்க வேண்டும் என பதாகைகள் ஏந் தியபடி துவங்கிய இப்பேரணியை, தனியார் பள்ளி தாளாளர் செந்தாமரை, இயக்குநர் சர வணபவா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். குமாரபாளையம் நகராட்சி காந்தி  சிலை முன்பு தொடங்கிய இப்பேரணி, குமார பாளையம் முக்கிய சாலைகளான சேலம் முதன்மைச் சாலை, எடப்பாடி சாலை, பள்ளி பாளையம் சாலை மற்றும் திருச்செங்கோடு செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகள் வழி யாக சென்று, குளத்துக்காடு பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.