திருப்பூர், ஆக. 14 - வீடில்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் காங்கேயத்தில் ஆர்ப்பாட்டம் புதனன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு அரசு ஓடை புறம் போக்கு மந்தைவெளி புறம்போக்கு மற் றும் நிலுவையில் உள்ள புறம்போக்கு நிலங்களில் சட்டப்படி வகை மாற்றம் செய்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், வீடு கட்டி குடியிருப்பவ ருக்கு பட்டா வழங்க வேண்டும், ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு வீடில்லாத அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத் தில் பாரபட்சம் இல்லாமல் வீடு கட்டித் தர வேண்டும், பட்டியலின மக்களுக் கும் ஏழை எளிய மக்களுக்கும் உரிய நிலம் ஆர்ஜிதம் செய்து வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் கட்சியின் நத்தக்காடையூர் கிளைச் செயலாளர் ஆர்.செல்வராஜ் தலைமை வகித்தார். காங்கேயம் தாலுகா குழு உறுப்பினர் எம்.கணேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் சார் பில் பி.நடராஜ், பி.செல்லமுத்து, சி.ஏ. செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்ற னர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், நூற் றுக்கும் மேற்பட்டோர் வீட்டுமனைப் பட்டா கோரி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.