மின்னணு எந்திரத்தை மாற்றி வாக்கு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அமைப்பின் மாநில நிர்வாகிகள் நிசாம், நாகூர் கனி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.