districts

img

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூன் 2- ஒன்றிய பாஜக அரசின் தவறான  பொருளாதார கொள் கைகளால் உயர்ந்து வரும் நூல் விலை உயர்வை கட்டுப்ப டுத்த வலியுறுத்தியும், விசைத்தறி தொழிலை பாதுகாக்க கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராசிபுரம் புதுச்சத் திரம் பிரதேச குழுவின் சார்பில் நாமக்கல் மாவட்டம், குரு சாமி பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ். கந்தசாமி,  பிரதேச செயலாளர் எஸ்.பெரியசாமி மற்றும் மூத்த தோழர் கள் எஸ். இராமலிங்கம், ஏழூர் ஜோதிமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். பிரதேச குழு  உறுப்பினர்கள் ஆர்.நாகேஷ் ஆர்.நடேசன், இ.கே.வி.சுந்தர ராஜ், பி.செல்லமுத்து மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் திர ளானோர் பங்கேற்றனர்.