நாமக்கல், நவ.7- தொடர் மின்வெட்டைக் கண்டித்து சிஐடியு விசைத் தறித் தொழிலாளர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தொடர்ந்து மின்வெட்டு இருந்து வருகிறது. இந்த மின்வெட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற் படுவதால், விசைத்தறித் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். விலைவாசி விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ள நிலையில், தொடர் மின்வெட்டால் மாதத் திற்கு ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 300 ரூபாய் வரை தொழிலாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு மின் வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சிஐடியு விசைத் தறித் தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமாரபாளையம் அருகே உள்ள சின் னப்ப நாயக்கன்பாளையம் மின்வாரிய அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, விசைத்தறித் தொழிலாளர் சங்க நக ரத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.அசோகன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றி னார். இதில் சங்கத்தின் நகரச் செயலாளர் கே.பாலுசாமி, உதவிச்செயலாளர் மோகன், பொருளாளர் வெங்கடேசன், சிபிஎம் முன் னாள் நகரச் செயலாளர் சக்திவேல் உட் பட ஏராளமான விசைத்தறித் தொழிலா ளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.