districts

img

குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கோரிக்கை

நாமக்கல், ஏப்.1- குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க  வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபா ளையம் தாலுகா, பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில், தமிழ்நாடு  அனைத்துவகை மாற்றத்திறனா ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் கூட்டம்  நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகி  கனகவல்லி தலைமை வகித்தார்.  இதில் தாலுகாச் செயலாளர் அருண் குமார், பொருளாளர் கனகவல்லி ஆகி யோர் சிறப்புரையாற் றினர். இக்கூட்டத் தில், பள்ளிபாளை யம் அக்ரகாரம் பகு தியில் கொசு தொல்லை அதிக மாக இருப்பதால், கொசு மருந்து அடிக்க வேண்டும். கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில், பள்ளி பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்க வேண்டும். ஆற்றங்கரை பகுதியை தூய் மையாக வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இதைத்தொடர்ந்து 30 நபர் களுக்கு உறுப்பினர் பதிவு செய்யப் பட்டு, உறுப்பினர் அட்டை உடனடி யாக வழங்கப்பட்டது.