districts

img

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை: சிஐடியு மனு

மேட்டுப்பாளையம், செப்.25- மேட்டுப்பாளையம் நகராட்சி யில் பணிபுரியும் தூய்மைப் பணியா ளர்களின் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி நகராட்சி ஆணை யரிடம் சிஐடியுவினர் மனு அளித்த னர்  கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் நகராட்சியில் 33 வார்டு கள் உள்ளன. இதில், சுமார் 70 நிரந் தர தூய்மைப் பணியாளர்களும், 140 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்க ளும் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களில், பல வருடங்களாக  பணியாற்றி விட்டு ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளர்கள் பலருக் கும் ஓய்வூதியப் பணப்பயன்கள் வழங்கப்படவில்லை. இயற்கை எய் திய பணியாளர்களின் குடும்பத்திற் கும் அரசால் வழங்க வேண்டிய ஓய் வூதியம் உள்ளிட்ட பல்வேறு சலு கைகள் வழங்கப்படவில்லை. மேலும், தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் வெள்ளிபாளையம் சாலையில் உள்ள குடியிருப்பு மிக வும் பழுதடைந்துள்ளது. மேலும், சுற்றுச்சுவர் இல்லாமல் பராமரிப்பு இல்லாததால் குடும்பத்துடன் அச் சத்துடன் இம்மக்கள் வசித்து வரு கின்றனர். ஒப்பந்த முறையில், பணியாற்றி வரும் ஒப்பந்த தூய் மைப் பணியாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த ஊதி யம் வழங்கப்படுவதில்லை.  மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண் டும். மேலும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த இபிஎப், இஎஸ்ஐ  போன்ற நிலுவையில் உள்ள தொகை யின் கணக்கினை தொழிலாளர்க ளுக்கு வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் ரூ.10 ஆயிரம்  மற்றும் உடைகள், பணியிடத்தில் தேவை யான உபகரணப் பொருட்கள் ஆகிய வற்றை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, மேட் டுப்பாளையம் நகராட்சி ஆணையர் மற்றும் நகர்மன்றத் தலைவர் உள் ளிட்டோரிடம்  சிஐடியுவினர் மனு அளித்தனர்.  இதுகுறித்து, சிஐடியு மேட்டுப் பாளையம் பொதுத்தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பாஷா  கூறுகையில், தூய்மைப் பணியா ளர்களின் கோரிக்கைகளை முன்னி ருத்தி மனு அளித்துள்ளோம். மனு வைப்பெற்றுக்கொண்ட ஆணை யர், அதிகபட்சம் ஒரு வார காலகட் டத்தில் தொழிலாளர்களை கோரிக் கைகளை நகராட்சி நிர்வாகம் ஒப் பந்ததாரர்களிடம் பேசி நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளார், என்றார்.