districts

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உதகை, மார்ச் 17- குடியுரிமைக்கு மதத்தை அடிப்படையாக்க கூடாது என்ற  கோரிக்கையை முன்வைத்து கூடலூரில் உள்ள காந்தி சிலை  அருகே அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல  அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டத்  தலைவர் வாசு தலைமை வகித்தார். முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் வாப்பு ஹாஜி துவக்கி வைத்தார். திமுக, காங்கி ரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக்  மற்றும் பல்வேறு அரசியல் பொதுநல அமைப்புகள் கலந்து  கொண்டனர். இதில் பாண்டியராஜ், லியாகத் அலி, இளஞ்செ ழியன், சகாதேவன், சிகே மணி, முகமது கணி, அனீபா உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற் றினர். மேலும் மக்களிடம் மதரீதியான பிளவுகளை ஏற்ப டுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்  என கோரிக்கை முழக்கமிட்டனர்.