திருப்பூர், மார்ச் 1 - அங்கன்வாடி ஊழியர் மற்றும் உத வியாளருக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு அங் கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க திருப்பூர் ஒன்றிய 5ஆவது மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற் றும் உதவியாளர் சங்க திருப்பூர் ஒன்றிய மாநாடு தியாகி பழனிசாமி நிலையத்தில் சனியன்று நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் மெகருன்னிஷா பேகம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.லதா வரவேற்றார். சிஐடியு மாநிலச் செயலாளர் கே.ரங் கராஜ் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப் புக்குழுத் தலைவர் எல்லம்மாள், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் மாலதி ஆகியோர் வாழ்த் திப் பேசினர். மாவட்டச் செயலாளர் கே. சித்ரா நிறைவுரை ஆற்றினார். இதில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளருக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் இறுதி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பறிக் கப்பட்ட சனிக்கிழமை வார விடுமுறை வழங்க வேண்டும். பணிக்கொடை அங் கன்வாடி ஊழியருக்கு ரூ.10 லட்சம் மற் றும் உதவியாளருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மே மாத விடு முறை 1 மாதம் முழுமையாக வழங்க வேண்டும். புதிய செல்போன் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இந்த மாநாட்டில் ஒன்றிய நிர் வாகிகள் புதிதாகத் தேர்வு செய்யப்பட் டனர்.