தருமபுரி, ஜன.24- நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்லும் தருமபுரி பத்திரப் பதிவுத்துறை அலு வலகத்தில் கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் சொல்ல முடியாத துயரத் திற்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டத்திலுள்ள தருமபுரி நக ராட்சி, அதக்கபாடி, அக்கமன அள்ளி, அன்ன சாகரம், ஆண்டிஅள்ளி, உங்கரானஅள்ளி, கடுகத்தூர், கிருஷ்ணாபுரம், குப்பூர், கொண்டம்பட்டி, கோணங்கி நாயக்கன அள்ளி, வெள்ளோலை மற்றும் பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட 32 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நிலங்களை வாங்க வும், விற்கவும் பத்திரப்பதிவு செய்வதற்கு தருமபுரி ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலு வலகத்திற்கு வந்து செல்கின்றனர். நாள் தோறும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், பொதுமக்களுக் கென கழிப்பறை வசதி இல்லை. அலுவல கத்தில் உள்ள கழிவறையை அங்கு பணி புரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை தவிர வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக கழிவறையை பூட்டி வைத் துள்ளனர். பொதுமக்களுக்கு என்று தனி கழிவறை இல்லாததால் பத்திரப்பதிவு அலு வலகத்தைச் சுற்றியுள்ள மறைவான பகுதி களில் சென்று பெண்களும் மூதாட்டிகளும் தங்களுடைய உபாதைகளை கழிக்க பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை பத்திரப்பதிவுத்துறை அலுவலரிடம் முறையிட்டும் அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தி வருகின்றனர். நிலங்களை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய மணி கணக்கில் காத்திருக் கும் நிலையில், பொதுமக்கள் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க கழிவறை வசதி ஏற்படுத்திக் கொடுக்காத அலட்சியப் போக்கு தொடர்கிறது. அரசு அலுவலகங்க ளில் பொதுமக்களுக்கு கழிவறை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற விதி முறைகள் இருந்தும், இதைப்பற்றி சிறிதும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்போக்குடன் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் பத்திர பதிவுத் துறை அலுவலகத்தில் கழிவறை வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.