திருப்பூர், ஜூலை 1- உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் குரல்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேலாண்மைக் குழு தலைவர் ஜெ.மகேஸ்வரி தலைமை தாங்கி னார். ஊராட்சி துணைத்தலைவர் தி. தங்கமணி முன்னிலை வகித்தார். பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது குறித்தும், மாணவர்கள் இல்லம்தேடி கல்வி சிறப்பு வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண் டுமென்றும் தலைமை ஆசிரியர் கௌரி பேசி னார். குரல்குட்டை பள்ளியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து கி.கனக ராஜ், பாலசுப்ரமணியம்,மாடசாமி, அரசி, சௌந்தர்ராஜ், சரோஜினி, லாவண்யா உட் பட குழு உறுப்பினர்கள் விவாதித்து தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. பள்ளி வளா கத்தில் தண்ணீர் தேங்காமல் மழைநீர் கடந்து செல்ல மண்கொட்டி மேடாக்கி கழிவுநீர் வடி கால் ஏற்படுத்த வேண்டும்.பள்ளியின் பின்பு றம் கழிப்பிடம் முன்பாக ஆபத்தாக உள்ள மின்கம்பத்தை உடனடியாக அகற்றி குழந் தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண் டும். பள்ளியின் சுற்றுச்சுவர் பாழடைந்துள்ள நிலையில் அதைப் பழுது பார்த்து வண்ணம் பூசி கோட்டோவியங்கள் வரைந்து சீர்படுத் திட வேண்டும். மாலை நேரங்களில் பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து பொதுச் சொத்துகளை பொருட்களை சேதம் விளை விப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்த வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நிறைவாக ஆசிரியர் உமாமகேஷ்வ ரன் நன்றி கூறினார்.