districts

img

திருப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையம் அமைக்க முடிவு

திருப்பூர், ஜூலை 20- மத்திய அரசு கொண்டு  வந்துள்ள அங்கீகரிக்கப் பட்ட ஓட்டுநர் பயிற்சி மையத்தை (ஏடிடிசி) அரசின்  அனுமதி பெற்று சங்க உறுப் பினர்கள் அனைவரும்  சேர்ந்து அமைப்பது என திருப்பூர் மாவட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்  நலச்சங்கம் தீர்மானித்துள்ளது. திருப்பூர் மாவட்ட இரண்டு மற்றும் நான்கு  சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமை யாளர் நல சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல்  வெள்ளியன்று நடைபெற்றது.  இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்  விபரம் வருமாறு: தலைவர் - பி.ரதிஷ்குமார் (லதா டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்), செயலாளர் - டி.மணியரசு (துரை டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்), பொருளாளர் - ஆர். சிவசுப்பிரமணியம் (அபிநயா டிரைவிங் ஸ்கூல்), துணைச் செயலாளர் - ஆர்.அன்பழ கன் (அன்பு டிரைவிங் ஸ்கூல்), நிர்வாக குழு   உறுப்பினர்கள் குமார் (ஆறுமுகம் டிரை விங் ஸ்கூல்), சத்ருக்கன் (வளர்மதி டிரைவிங் ஸ்கூல்), ரவி (சாமுண்டி டிரைவிங் ஸ்கூல்), சிவா (ஜி.எஸ். டிரைவிங் ஸ்கூல்), தம்பு (உமா டிரைவிங் ஸ்கூல்), சரவணன் (எஸ் எஸ் டிரைவிங் ஸ்கூல்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  திருப்பூரில் சாலை விதி களை முறையாக பொதுமக்களுக்கு  கற் பித்து முறையாக பயிற்சி அளித்து சாலை விபத்துகளை குறைப்பது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள அங்கீகரிக்கப்பட்ட ஓட்டு நர் பயிற்சி மையத்தை (ஏடிடிசி) சங்க உறுப் பினர்கள் அனைவரும் சேர்ந்து அமைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.