கோவை, பிப்6- கோவையில், வனத்திற்குள் மர்மமான முறையில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட மானார் பிரிவு பில்லூர் பீட் பகுதியில் வனத்துறை ஊழியர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரளிக்காடு சரகம் பில்லூர் காப்புக்காடு பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து வனப் பணியாளர்கள், காரமடை வனச்சரகர் மனோகர னுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது இறந்து கிடந்தது 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது. இறந்த யானையின் உடலை பிரேத பரி சோதனை செய்ய முடிவு செய்தனர். ஆனால் இரவு வெகு நேரமாகி விட்டது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து வனத்துறையி னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உத்தர வின்பேரில், ஞாயிறன்று மீண்டும் யானையின் உடல் அங்கு வைத்தே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து யானை இறந் ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.