districts

மகளுக்கு வரதட்சணை கொடுமை: காவலர் தற்கொலை முயற்சி

சேலம், ஜூலை 31- மகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக,  மன வேத னையில் தலைமை காவலர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம் பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக் கப்பட்ட பெண்  ஆட்சியர் அலுவலகத் தில் புகார் அளித்துள்ளார். சேலம் மாவட்டம், சின்ன திருப் பதி பகுதியைச் சேர்ந்த கன்னங் குறிச்சி தலைமை காவலர் காளியப் பன் மகள் உதய தர்ஷினி. இவர் திங்க ளன்று தனது கணவர் மற்றும் அவ ரின் குடும்பத்தினர் மீது புகார் அளித் தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஓமலூர் பகுதியை சேர்ந்த ராஜ்கும ரன் என்பவருடன் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. அப் போது, 6 பவுன் நகையும்  மூன்று லட்ச ரூபாய் பணம் மற்றும்  இரண்டு சக் கர வாகனம் ஆகியவை வரதட்சணை யாக கொடுக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். இந்நிலை யில், எனது தந்தை பல்வேறு இடங் களில் கடன்  பெற்று 16 லட்ச ரூபாய் எனது கணவரிடம் வழங்கி உள்ளார். இந்நிலையில் கணவரின் தம்பி என்னி டம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்தார். இதுகுறித்து பள் ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், போலீசார் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மேலும் 3 லட்சம்  ரூபாய் பணம் வேண்டும் என கணவர் விட்டில்  தொந்தரவு செய்தனர். ஏற்க னவே பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதால் கடன் கொடுத்தவர்கள் எனது தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர் இத னால் மன வேதனையில் இருந்த எனது தந்தை காளியப்பன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார் அவர் தற்போது சேலம் அரசு மருத்து வமனை சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வரும் எனது  கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தி னர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றார்.