பொள்ளாச்சி, மே 15- பொள்ளாச்சியிலிருந்து புதுக் கோட்டை செல்லும் அரசுப்பேருந் தின் இருக்கைகள் பெரும்பாலும், சேதமடைந்துள்ளதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள னர். கோவை மாவட்டம், பொள் ளாச்சி பணிமனை 2-லிருந்து புதுக் கோட்டைக்கு அரசு பேருந்து இயக் கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து தின சரி மாலை 4.40க்கு புறப்படும் இப்பேருந்து, உடுமலை, பழநி, திண்டுக்கல் வழியாக புதுக்கோட் டைக்கு அதிகாலை 2.40க்கு சென் றடைகிறது. இதேபோல் புதுக் கோட்டையிலிருந்து அதிகாலை 4.40க்கு புறப்படும் இப்பேருந் தானது, பொள்ளாச்சிக்கு நண் பகல் 3 மணியளவில் வந்தடை கிறது. இதற்கிடையே இப்பேருந் தின் இருக்கைகள் 50 சதவிகிதத் திற்கு மேலாக சேதமடைந்துள் ளது. இதனால் ஏறக்குறைய 12 மணி நேரம் பயணிக்கக்கூடிய பய ணிகள் பெரும் அவதிக்குள்ளாகி யுள்ளனர்.
பேருந்தின் மறைவில் சிறுநீர் கழிப்பதா? |
பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையத்தில் கோவை செல்லும் பிரிவில் நிறுத்தப்படும் பேருந்தின் பின்புறம் அரசு பேருந்து நடத்துனர் கள் சிறுநீர் கழித்து வருகின்றனர். அங்கு பொதுக்கழிப்பிடம் இருந் தும் அதனை பயன்படுத்தாமல் இப்படியொரு செயலை செய்து வருவதால், பெண் பயணிகள் முதல் அனைவரும் முகம் சுழிக்கும் சூழல் நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர். இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சி முறையாக நடவ டிக்கை எடுக்க வேண்டும். பொதுவெளியில் பேருந்துகளின் பின் புறம் சிறுநீர் கழிக்கும் நபர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
இதுகுறித்து பேருந்து ஓட்டுனரிடமும், நடத்துனரிடமும் புகார் தெரிவித்தாலும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பொள்ளாச்சி - புதுக்கோட்டை செல்லும் பயணி கள் கூறுகையில், தமிழக அரசு பேருந்தில் அரசு நிர்ணயித்த கட்ட ணம் தனியார் பேருந்துகளை விட குறைவாக உள்ளதால் பயணம் செய்கின்றோம். பொள்ளாச்சியி லிருந்து புதுக்கோட்டைக்கு ஒரே யொரு பேருந்து மட்டுமே இயக் கப்படுகிறது. இதனை நம்பி நூற் றுக்கணக்கான பொதுமக்கள் உள் ளனர். ஆனால், அப்பேருந்தின் இருக்கைகள் சேதமடைந்துள்ள தால் பயணம் செய்ய முடிய வில்லை. எனவே, தமிழக போக்கு வரத்து துறை அதிகாரிகள் இப் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பொள்ளாச்சி போக்குவரத்து கழகத்தின் கிளை 2 மேலாளர் ஆறுமுகம் கூறுகை யில், மேற்கண்ட அரசுப்பேருந் தில் உள்ள சேதமடைந்த இருக் கைகள் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு வார காலத்தில் மாற்றித்தருகி றோம். இனி இதுபோன்ற குறை பாடுகள் ஏற்படாதவாறு நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார்.