திருப்பூர், ஜூலை 29 – திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மயில் மற்றும் மான்கள் விவசாயப் பயிர்களை நாசம் செய்து பெரும் இழப்பு ஏற்படுத்தி வரு கின்றன. இவற்றில் இருந்து விவ சாயப் பயிர்களைப் பாதுகாக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.அப்புசாமி ஆட்சியருக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் தேசியப் பறவையான மயில் மற்றும் மான் கள் தொல்லையால் பல வருடங் களாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் குறைதீர்க் கூட்டங்களில் பல முறை மனுக் கொடுத்தும், தேசிய பறவை மயில் என்றும், வனவிலங்கு மான் என்ப தாலும் அவற்றை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப் படாமல் உள்ளது. ஆனால் தக்காளி, மிளகாய், வெங்காயம், நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம் மற்றும் பல வகை யான காய்கறிகள், பழங்கள் என விவ சாயிகளின் சாகுபடி செய்யும் பயிர் கள் மயில், மான்களால் சேதமாக்கப் படுகின்றன. இதனால் விவசாயி களுக்கு மிகப்பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. அத்துடன் மின் கம்பிகளில் சிக்கி யோ, நாய்கள் கடித்தோ மயில், மான் கள் இறந்துவிட்டால் அதற்கும் அரு காமையில் இருக்கும் விவசாயிகள், காவல் துறை மற்றும் வனத்துறை யின் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மயில், மான்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இவற் றால், உணவுப் பயிர்கள் விளையும் நிலையிலேயே அழிக்கப்படும். எனவே, விவசாயத்தைப் பாதுக்கா கவும், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை தவிர்க்கவும், மயில், மான்களை கட்டுப்படுத்த, தடுக்க உரிய நடவடிக்கைகளை அரசு நேரடி கவனம் செலுத்தி மேற் கொள்ள வேண்டும். அதேபோல், தெருநாய்கள் தொல்லையும் அதிகரித்துள்ளன. தெருநாய்கள் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு விவசாயிகளின் கன்று குட்டிகள், ஆடு, கோழி ஆகிய வற்றை கடித்து உயிரிழப்பை ஏற் படுத்துவதுடன், சிறுவர்கள் முதல் பெரியவர்களையும் கடித்து ஆபத்து ஏற்படுத்துகின்றன. தெரு நாய் களுக்கு கருத்தடை சிகிச்சை அளித்து வெளியே விடுவதாகச் சொல்வதால் பயன் ஏற்படவில்லை. எனவே தற்போது மாவட்ட நிர் வாகம், வனத்துறை சேர்ந்து தற் போது அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தெரு நாய்களை முழுமை யாகப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். வனவிலங்குகள், தெருநாய்கள் தொல்லை யில் இருந்து விவசாயிகளையும், பொது மக்களையும் காக்க முடியும் என அதில் தெரிவித்துள்ளார்.