districts

img

சிபிஎம் ஏற்காடு ஒன்றியச் செயலாளராக டி.நேரு தேர்வு

சேலம், நவ.17- மார்க்சிஸ்ட் கட்சியின் ஏற் காடு ஒன்றியச் செயலாளராக டி. நேரு தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டம், ஏற் காடு ஒன்றிய 9 ஆவது மாநாடு தோழர் என்.சங்கரய்யா நினை வகத்தில், ஞாயிறன்று நடை பெற்றது. செங்கொடியை இ. லூர்து, இ.நெடுஞ்செழியன் ஆகியோர் ஏற்றி  வைத்தனர். கிளைச் செயலாளர் தேவ ராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஒன் றியக்குழு உறுப்பினர் பரணிசாமி வரவேற் றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஐ. ஞானசௌந்தரி துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் டி.நேரு அறிக்கையை முன்வைத்தார். இம்மாநாட்டில், ஏற்காடு பகு தியிலுள்ள அரசு மருத்துவமனையில் அடிப் படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து மருத்துவ உப கரணங்களையும், மருத்துவர்கள் பயன்படுத் தும் வகையில் மருத்துவமனையை தரம்  உயர்த்த வேண்டும். சுற்றுலாப்  பகுதியாக ஏற்காடு இருப்ப தால், சாலைகளில் கால்நடை கள் நடமாடுவதால் வாகன  விபத்துகள் ஏற்பட்டு, பல  நேரங்களில் மனித உயிரி ழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகி றது. எனவே, சாலையில் நட மாடும் கால்நடைகள் கட்டுப் படுத்த நகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஏற்காடு கொட் டைச்சேடு பகுதியில் மக்களின் நீண்ட நாள்  கோரிக்கையாக ஆறாம் நம்பர் பீல்ட் பகுதி யில் தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் ஏற்காடு ஒன்றியச் செயலாளராக டி.நேரு மற்றும்  7 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன் நிறைவுரையாற்றினார். முடிவில், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.