திருப்பூர், ஏப்.12- திருப்பூர் புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் தமிழகத்தின் பிரபல ஆளு மைகள் பங்கேற்கும் கலை, இலக்கிய, பண்பாட்டு திருவிழா நடத்தப்படுகிறது
மாலை நேர நிகழ்வுகள்
ஏப்ரல் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் இக்கண்காட்சி வளாகத்தில் வட்ட மேசை விவாத அரங்கம் நடைபெறுகிறது. அனைவரது வளர்ச்சிக்கான மாடல் எது என்ற தலைப்பில் ஊடக நெறியாளர் ச.கார்த்திகைச் செல்வன் தலைமையில் இந்த விவாத அரங்கம் நடைபெறும். ஏப்ரல் 16ஆம் தேதி சனிக்கிழமை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பசியின் கதை என்ற தலைப்பில் கருத்துரை ஆற்று கிறார். ஏப்ரல் 17ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் கம்பம் பெ.செல்வேந்திரன் சங்கத் தமிழும், பிற்காலத் தமிழும் என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றுகிறார். திங்கள்கிழமை நிகழ்வில் குழந்தை களைக் கொண்டாடுவோம் என்ற தலைப் பில் உமாநாத் விழியன், கவிதையில் சமூக நோக்கு என்ற தலைப்பில் கவி. வெற்றிச் செல்வி ஆகியோர் உரையாற்று கின்றனர்.
மாணவர் பரிசளிப்பு விழா
கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நடத்தப் பட்ட திறனாய்வு போட்டிகளில் பங் கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாண விகளுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி திங்கள் கிழமை மாலை பரிசளிப்பு விழா நடை பெறுகிறது. இதில் மாநகராட்சி ஆணை யர் கிராந்தி குமார் பாடி ஐஏஎஸ், திருப் பூர் மாநகர காவல் துணை ஆணையர் பி.ரவி ஐபிஎஸ் ஆகியோர் பங்கேற்று பரிசு வழங்குகின்றனர். பிரபல கதை சொல்லி, எழுத்தாளர் பவா.செல்லதுரை பேசுகிறார். ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறும் நிகழ் வில் ஐஏஎஸ் அதிகாரி ஜி.பாலச்சந்திரன் நாடு எங்கே செல்கிறது என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். ஏப்ரல் 21ஆம் தேதி திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாரதி விழாவும், பாராட்டு விழாவும் நடைபெறுகிறது. இதில் பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழக அரசின் பாரதி விருது பெற்ற திரைப்பட இயககுநர் பாரதி கிருஷ்ண குமார் ஆகியோரை ஆயத்தஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் தலைவர் ஏ.சக்திவேல் பாராட்டி சிறப்பிக்கிறார். ஏப்ரல் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை, வாழ்வின் சாரத்தைப் பெரிதும் தருவது அன்றைய இலக்கியங்களா? இன்றைய இலக்கியங்களா? என்ற தலைப்பில் எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறு கிறது.
ஏப். 23ஆம் தேதி சனிக்கிழமை தொன் மைக்கு அஞ்சேல் என்ற தலைப்பில் கே.சுப்பராயன் எம்.பி., நல்ல விழுமியங்களை இழப்போமோ? என்ற தலைப்பில் ஊடகவியலாளர் ஜென்ராம் ஆகியோர் பேசுகின்றனர். நிறைவு நாளான ஏப்ரல் 24ஆம் தேதி திருப்பூர் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் மக்களைப் பெரிதும் ஈர்ப்பது கதைகளா ?கவிதைகளா? என்ற தலைப்பில் நடுவர் பி.மணிகண்டன் தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் நடத்தப்படுகிறது.
அடிப்படை வசதிகள்
இந்த வளாகத்திலேயே இரு சக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், குழந்தைகள் உள்பட அனைவருக்கும் நியாய விலையில் சிற்றுண்டி வசதி, குடி நீர் உள்ளிட்ட இதர வசதியும் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தைப் போலவே இந்த ஆண்டும் புத்தக வாசகர்கள், ஆர்வலர் கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தை கள், சிறார்கள் என லட்சத்துக்கும் மேற் பட்ட பார்வையாளர்கள் வருகை தரு வார்கள், புத்கக விற்பனையும் சாதனை படைத்து, புதிய உயரத்தை எட்டிப் பிடிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் வரவேற்புக்குழுத் தலைவர் பி.மோகன் கூறினார்.