districts

img

சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்!

கோவை, நவ.2- தீபாவளி தொடர் விடுமுறையை ஒட்டி பொள்ளாச்சி கவிய ருவி, கோவை குற்றாலம் ஆகிய சுற்றுலாத் தலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தொடர் விடுமுறையை அனுபவிப்பதற்கு இயற்கை சார்ந்த இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்ற னர். அந்த வகையில் கோவையில் உள்ள கவியருவி மற்றும் கோவை குற்றாலம் ஆகிய இடங்களுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். வால்பாறை மற்றும் கவி யருவி செல்ல நுழைவு கட்டணம் வாங்குவதற்காக ஆழியார்  வனத்துறை சோதனை சாவடியில் இருசக்கரம் மற்றும் நான்கு  சக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கூட்டம் அதி கரித்து வருவதாலும், பாதுகாப்பு கருதியும் வனத்துறையினர் மற்றும் போலீசார் தற்பொழுது பாதுகாப்பு பணியிலும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.  இதேபோன்று, போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில், கோவை குற்றாலத்தில், சுற்று லாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. வெள்ளியன்றும், சனியன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் மற்றும் கேரளம், மகாராஷ்டிரா, கர்நாடகா  போன்ற மாநிலங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். வனப்பகுதிக்குள் நடந்து சென்று  நீர்வீழ்ச்சியில், குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.