கோவை, டிச.4- டாப்சிலிப் உண்டு உறைவிட பள்ளி யில் ஏற்பட்டுள்ள தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திட மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு ஏற்படுத் திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த டாப்சிலிப்ல் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. எருமை பாறை, கோழிகமுத்தி, கூமாட்டி உள் ளிட்ட பழங்குடி கிராம மக்களின் குடும் பங்களை சேர்ந்த சுமார் 80 மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். தமிழ கத்தில் வனத்துறையினரால் நடத்த படும் 16 பள்ளிகளில் கோவை மாவட் டத்தில் இந்த ஒரு பள்ளி மட்டுமே செயல்பட்டு வருகிறது. 30 மாண வர்கள் விடுதியிலும், 50 மாணவர்கள் வீட்டிற்கு சென்று வந்தும் படித்து செல் கின்றனர். இந்நிலையில், இப்பள்ளி யில் செயல்பட்டு வந்த தண்ணீர் குழாய் பைப் அடிக்கடி உடைந்து பள்ளிக்கு வரும் நீர் தடைபடுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. தண்ணீர் பற் றாக்குறையினால் கடந்த ஓராண்டாக மாணவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், யானைகள் நடமாட்டம் உள்ள இப்ப குதியில் சில சமயங்களில் தண்ணீர் குழாய்களை யானைகள் சேதப்படுத்தி விடுகின்றன. உடைந்த குழாய்களை சரி செய்து தண்ணீர் வழங்க ஓரிரு நாட் கள் ஆகிவிடுகிறது. அச்சமயத்தில் வனத்துறை சார்பில் டிராக்டர் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இப்பள் ளிக்கு தனியாக ஆழ்குழாய் கிணறு அமைக்க கோரிக்கை விடுத்துள் ளோம், என்றார். தண்ணீரின்றி அவதியடைந்து வரும் மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுகாச் செயலாளர் பரமசிவம் வலி யுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்டைகாரன் புதூர் பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் சாத்துக் குட்டி கூறுகையில், பழங்குடி மாண வர்கள் படிக்கும் பள்ளி மற்றும விடுதி வனத்துறை கட்டுபாட்டு பகுதியில் வருகிறது. பள்ளிக்கு தனியாக ஆழ்குழாய் கிணறு அமைக்க வனத் துறை மற்றும் வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி நிர்வாகங்களிடம் பேசி வரு கிறோம் என்றார்.