திருப்பூர், ஜூலை 27 - திருப்பூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலம் ஐந்தாவது வார்டு வாவிபா ளையம் பகுதியில் தெரு நாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழந்துள்ளன. தெரு நாய் தொல்லைக்கு முற்றுப் புள்ளி வைக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக் குழு சார்பில் மாவட்டக் குழு உறுப்பினர் ஆ. சிகாமணி மாநகராட்சி ஆணையாள ருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட வாவிபாளையம் தாசங்காடு உதயம் பேக்கரி வி.கே.பழ னிச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மூன்று ஆடுகளை கட்டி வைத்திருந்தனர். சனிக்கிழமை அதி காலை சுமார் 5 மணி அளவில் தெரு நாய் கள் கும்பலாக வந்து மூன்று ஆடுகளை யும் கடித்து குதறியது. இதில் மூன்று ஆடுகளும் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டன. வாவிபாளையம், நெருப்பெரிச்சல், குருவாயூரப்பன் நகர், சேடர்பாளை யம், கூலிபாளையம், சமத்துவபுரம், தோட்டத்துபாளையம், ஜி.என்.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து பொதுமக்களுக்கும், ஆடு மாடுகளுக் கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. ஆடுகளை கடித்தது போன்ற தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடி யாக நடவடிக்கை எடுத்து, பொது மக்க ளுக்கு பெரும் அச்சுறுத்தலாக வீதிக ளில் சுற்றிவரும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்தும்படி ஆ.சிகா மணி கேட்டுக் கொண்டுள்ளார்.