திருப்பூர், ஆக.12- பொங்குபாளையம் ஊராட்சி பரமசிவம்பாளையம் தோட் டங்களில் குடிநீர் இணைப்பு வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று மனு அளிக்கப்பட் டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட பரமசிவம்பாளையம் தோட்டங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின் றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங்குபாளையம் கிளைச் செயலாளர் எஸ்.அப்புசாமி பொங்குபாளையம் ஊராட்சி மன்றத் தலைவரிடம் திங்களன்று மனு அளித்தார். மனுவை பெற்று கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர் ஒரு வார காலத்திற் குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்த மனு கொடுக்கும் இயக்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கலாம்பாளையம் கிளைச் செயலாளர் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.