ஈரோடு, ஜூலை 12- ஒன்றிய அரசின் புதிய குற்ற வியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி வெள்ளியன்று மார்க் சிஸ்ட் கட்சியினர் பவானியில், நீதி மன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தண்டனை சட்டம், இந் திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்கள் ஆகியவற்றை பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சன்ஹிதா மற்றும் பாரதிய சாட்சிய சட்டம் என மாற்றி ஜூலை 1 முதல் அமலாக்கியுள்ளது. அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத் தில் பெயர் மாற்றி, காவல்துறைக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே அதனைத் திரும்பப் பெற வேண்டுமென வலியு றுத்தி ஒன்றிய மோடி அரசை கண் டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங் களை நடத்த மார்க்சிஸ்ட் கட்சி அறை கூவல் விடுத்துள்ளது. இதன்தொடர்ச் சியாக ஒன்றிய மோடி அரசின் புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பவானி நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஜெகநாதன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம், தாலுகா குழு உறுப்பினர் சண்மு கம், போக்குவரத்து சேகர் உள்ளிட்ட திராளனோர் பங்கேற்றனர். திருப்பூர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதி ரான மூன்று குற்றவியல் சட்டங்க ளையும் உடனடியாக திரும்பப் பெற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 15 வேலம்பாளையம் நகரக் குழு சார்பில் வெள்ளியன்று தண்ணீர் பந்தல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அ.உமாநாத் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர்கள் சங்க மாநிலச் செயலாளர் அ.மனபாலன், மார்க் ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ரங்கராஜ், நகரக்குழு செயலாளர் ச.நந்தகோபால், நகரக்குழு உறுப் பினர் அ.ஆறுமுகம் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். கோவை இதேபோன்று, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.