தருமபுரி, நவ. 20- தருமபுரி மாவட்டம் மிட்டா கோம்பேறி முதல் காளிக்கரம்பு வரை உள்ள 1.5 கிலோமீட்டர் மலைப்பாதை வசதி ஏற்படுத்தக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட் சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், கொண்டகரஹள்ளி, வே. முத்தம்பட்டி, திப்பிரெட்டிஅள்ளி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட காளிக் கரம்பு, அனுமந்தபுரம், மணலூர், கொப்பங்கரை, கொண்ட கரஹள்ளி, முத்தம்பட்டி காலனி, சிக்கம்பட்டி, திப்பிரெட்டிஅள்ளி, பண்பாசெட்டிபட்டி, கோவன் கொட்டாய், குக்கல்மலை, சந்தனுர் ஆகிய கிராமங்களில் சுமார் 20 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி யில் தலித் மற்றும் பழங்குடி மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். 100 கிமீ சுற்றுகிறார்கள் இப்பகுதி மக்கள் மாவட்ட வட்ட தலைநகருக்கு பொம்பிடி, கடத்தூர் வழியாகத்தான் சுமார் 100 கி.மீ தூரம் சென்று வர வேண்டி உள்ளது. இத னால் இப்பகுதி மக்கள், அலுவல் பணியின் காரணமாக தருமபுரி வந்து செல்வதிலும், கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட வன அலுவலகம் ஆகிய அலுவலககங்களுக்கு அவசர பணி யின் காரணமாக வந்து செல்வதில் சுமார் 100 கி.மீ தூரத்திற்கு மேல் சுற்றி வரவேண்டியுள்ளது. மேற் கண்ட அலுவலகங்களுக்கு வந்து, செல்ல ஒரு முழு நாள் செலவாகி றது. மேலும், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து வசதியும் இல்லாத தால் இப்பகுதி மக்கள் பெரும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். கொண்டகரஹள்ளி, காளிகரம்பு, ராமசாமி கோயில் வரையிலும், மிட்டாரெட்டிஹள்ளி, கோம்பேரி வரையில் சாலை வசதி ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி களை இணைக்க இடைப்பட்ட பகுதியில் 1.5 கி.மீ மட்டுமே சாலை வசதியில்லாமல் உள்ளது. வனத் துறைக்கு சொந்தமான இந்த 1.5 கி.மீ சாலை வசதி ஏற்படுத்த வேண் டும் என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்ற னர். மேற்கண்ட வழியில் 1.5 கிலோ மீட்டர் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என தொடர்ந்து மார்க் சிஸ்ட் கட்சி அதிகாரிகளிடம் வலியு றுத்தி வருகிறது. மாவட்ட ஆட்சி யர் நேரில் வந்து பார்வையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப் படவில்லை. எனவே மிட்டா கோம் பேறி முதல் காளிக்கரம்பு வரை உள்ள 1.5 கிலோமீட்டர் மலைப் பாதை வசதி ஏற்படுத்தக் கோரி புத னன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவிற்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.மாரிமுத்து தலைமை வகித் தார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட் டச் செயலாளர் ஏ.குமார், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எம்.முத்து, தி.வ.தனுசன், எஸ். கிரைஸாமேரி, ஒன்றியச் செயலா ளர்கள் நல்லம்பள்ளி எஸ்.எஸ். சின்னராஜ், தருமபுரி கே.கோவிந்த சாமி, இண்டூர் சி.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.குப்புசாமி, கே.என்.மல்லையன், கே.எல்லப் பபன், கே.பூபதி, என்.கந்தசாமி, எம்.அருள் குமார், ஆர்.ஜோதிபாசு ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். விரும்பாத சாலையும், விரும்பும் சாலையும் முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி பேசுகையில், பொம்மிடி அருகே உள்ள 11 கிராமங்கள் தரும புரி மலையை சுற்றி வரவேண்டும். 1.5 கிலோமீட்டர்மலைப்பாதையில் சாலை அமைத்தால் கிராம மக்கள் பயன்பெறுவார்கள். இந்த கோரிக் கைக்காக பல கட்ட போராட்டங் களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி யுள்ளது. மக்களே விரும்பாத 8 வழிச்சாலையை அமைப்போம் என்று சொல்லும் அரசு, மக்கள் தேவைக்கான சாலையை அமைக்க தயக்கம் காட்டுகிறது. இந்த சாலையை அமைக்க வனத்துறை யினர் அனுமதி பெற்று சாலை அமைப்பதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். இந்த சாலையை அமைக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்றார்.