அவிநாசி, ஜூலை 13- சென்னிமலை கவுண்டர் நகர் பகுதி மக்கள் ரயில்வே பாதை அடைக்கப்பட்டதால் 5 கிலோமீட்டர் மின்விளக்கு இல்லாத மண் பாதை யில் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள் ளது. மேலும், சாலை அமைக்க நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டப்பட்டும், பணிகள் துவங்கப்படாததால் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜூலை 15 ஆம் தேதி நடை பயண இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளனர். அவிநாசி ஒன்றியம் புதுப்பாளை யம் ஊராட்சிக்கு உட்பட்ட ரயில்வே பாதை அருகில் தனிநபர் ஒருவரின் விவசாய நிலம் இருந்தது. காலப் போக்கில் விவசாயம் செய்ய முடியா ததால், 15 ஆண்டுகளுக்கு முன்பு 80 க்கும் மேற்பட்ட வீட்டு மனைகளாக பிரித்து சென்னிமலை கவுண்டர் நகர் என பெயர் வைத்து விற்பனை செய் யப்பட்டுள்ளது. இப்பகுதி வஞ்சிபா ளையம் ரயில்வே பாதைக்கு மிக அரு கில் இருந்ததால், பலர் வீட்டுமனை வாங்கியுள்ளனர். வீட்டுமனையை விற்பனை செய்தவர் முன்கூட்டியே இந்த ரயில்வே பாதை நிரந்தர மில்லை. சென்னிமலை கவுண்டர் நகர் பகுதிக்கு வந்து செல்ல சாமந் தங்கோட்டை பாதையை தான் பயன் படுத்த வேண்டும் என பத்திர பதிவு செய்யும்போதே தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது சென்னிமலை கவுண்டர் நகர் உருவாக்கத்திற்கு முன்பே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துசாமி ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்ற உடன், விவசாயிக ளின் நலன் கருதி பல சிக்கல்களை நிவர்த்தி செய்து, சாமந்தங்கோட்டை வழியை பார்மேஷன் செய்து கொடுத்துள்ளார். சென்னிமலை கவுண்டர் நகர் உருவாகிய பிறகு அப் பகுதி மக்கள் இப்பாதையில் வஞ்சிப் பாளையம் செல்ல 5 கிலோமீட்டர் பய னிக்க வேண்டும் என்பதால், இப்பா தையை பயன்படுத்தாமல் ரயில்வே வழித்தடத்தை பயன்படுத்தி வந்த னர். மருத்துவமனை, அரசு பள்ளிகள், மளிகை கடை, திருப்பூர் செல்லும் சாலை உள்ளிட்ட அன்றாட தேவைக ளுக்கு வஞ்சிப்பாளையம் வந்து செல்ல வேண்டும் என்பதால், சென் னிமலை கவுண்டர் நகர் பகுதி மக்கள் 10 நிமிடத்தில் வந்து செல்ல கூடிய அரை கிலோ மீட்டர் ரயில்வே வழித்த டத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு ரயில்பாதை அகலப்படுத்தும் பணியை ரயில்வே நிர்வாகம் மேற் கொண்டு வருவதால், இந்த வழித்த டம் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னிமலை கவுண்டர் நகர் பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள் ளனர். மேலும், சாமந்தங்கோட்டை வழியை பயன்படுத்தத் தொடங்கி யுள்ளனர். ஆனால் இந்த வழி மண் சாலையாக உள்ளதால் மழைக்கா லங்களில் வாகனங்கள் சென்று வர முடியாத சூழல் நிலவி வந்துள்ளது. இதையடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ரூ.49.51 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சாலை அமைக்கும் பணிக்கு அடிக் கல் நாட்டினார். ஆனால் தற்போது வரை பணிகள் தொடங்கப்பட வில்லை. பொதுமக்களின் நலன் கருதி அவசரகால வழி ஏற்படுத்த வேண்டும், அடிக்கல் நாட்டப்பட்ட சாலைப்பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 15 ஆம் தேதி வஞ்சிபாளை யம் பேருந்து நிறுத்தம் முதல் அவி நாசி வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை நடைபயண இயக்கம் மேற் கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள னர். இருப்பினும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போராட்டம் நடத்த உறு தியாக இருப்பது தெரிய வருகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் முத்துசாமி கூறுகையில், ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப் பேற்ற உடன் சாமந்தங்கோட்டை முதல் சென்னிமலை கவுண்டர் நகர் வரை ஒரு நபர் செல்லும் பாதையாக இருந்தது, விரிவாக்கம் செய்யப் பட்டு பார்மேஷன் செய்து கொடுக்கப் பட்டது. இடையூறுகளை கடந்து கடு மையான முயற்சிக்குப் பின்பே பாதை அமைக்கப்பட்டது. பல ஆண் டுகள் கடந்து விட்டது. தற்போது மீண் டும் ஒன்றியக் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட பின்பு, அதிகாரிகள் மற் றும் மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பு உட் பட பல கட்ட போராட்டத்திற்கு பின்பு சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப் பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் ஒரு வருடம் ஆகியும் பணி கள் நடைபெறாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளது. இதனால், சென்னிமலை கவுண் டர் பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவசர மருத் துவ தேவைக்கு கூட 5 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இப்பகுதி மக்களின் துயர் போக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும், வஞ்சிபாளையம் ஏடி காலனியில் உள்ள சாக்கடையை புதுப்பித்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஜூலை 15 ஆம் தேது மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பயண இயக்கம் நடத்த திட்டமிட்டுள் ளோம். என்றார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கிளைச்செயலாளர் கதிர் வேல் கூறுகையில், சென்னிமலை கவுண்டர் நகர் பகுதி மக்கள் அன் றைய காலகட்டத்தில், ரயில்வே பாதை பிரதானமான பாதையாகவே இருக்கும் என்று நம்பி வீட்டும னையை வாங்கியுள்ளனர். சாமந்தங் கோட்டை பாதையை அவர்கள் பெரி தாக எடுத்துக் கொள்ளவில்லை. தற் போது ரயில்வே நிர்வாகம் பாதையை அடைத்த பின்பு கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்களின் நலன் கருதி விரைவாக வஞ்சிபா ளையம் வந்தடைவதற்கு பொருத்த மான பாதையை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்றார். ஒன்றிய குழு உறுப்பினர் குட்டி (எ) மோகனசுந்தரம் கூறியதாவது, ரயில்வே வழித்தடத்தை நம்பியே சென்னிமலை கவுண்டர் பகுதி மக் கள் குடியேறினர். பத்திரப்பதிவில் சாமந்தங்கோட்டை என்று பதியப்பட் டதை அவர்கள் கண்டு கொள்ள வில்லை. இப்பகுதி மக்களுக்கு சாமந்தங்கோட்டை சாலை பொருத்த மான சாலை அல்ல, பொது மக்க ளுக்கு பொருத்தமான சாலையை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டும் என்றார். இதுகுறித்து சென்னிமலை கவுண்டர் நகர் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் கூறுகையில், பல வரு டங்களுக்கு முன்பு இரண்டு ரயில்வே தண்டவாளம் மட்டுமே இருந்தது. அத னருகில் இருந்த பாதையை பயன் படுத்தி வந்தோம். தற்பொழுது ஐந்து தணடவாளமாக அதிகரித்துவிட்டது. பாதையை மறைத்து விட்டனர். இத னால் 5 கிலோ மீட்டர் சுற்றி சாமந்தங் கோட்டை வழியாக வஞ்சிபாளையம் செல்ல வேண்டி உள்ளது.
இது மண் பாதை, மின்விளக்கு கூட இல்லை. இதனால் பாதுகாப்பற்ற சூழலில் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வரு கின்றனர். எனவே அரசு வஞ்சிபாளை யம் செல்வதற்கு மாற்றுப் பாதை அமைத்து தர வேண்டும் என்றார். வச்சலா என்பவர் கூறுகையில், இப்பகுதிக்கு குடியேறி 15 வருடங் கள் கடந்து விட்டது. அன்று முதல் ஆறு மாதத்திற்கு முன்பு வரை ரயில்வே பாதையை தான் பயன்ப டுத்தி வந்தோம். தற்பொழுது ரயில்வே பாதையை அடைத்துவிட் டனர். இதனால் இரவு நேரத்தில் மருத் துவமனைக்கு செல்லக்கூட 5 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள் ளது. சாமந்தங்கோட்டை வழி பொருத்தமான வலி அல்ல. சுபகாரி யங்களுக்கு கூட உறவினர்கள் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வாகனங்கள் வர முடி யாத நிலை இருக்கிறது. பலர் வீடு களை காலி செய்துவிட்டு வேறு இடத் திற்கு குடிபெயர்ந்து விட்டனர். மாவட்ட நிர்வாகம் எங்கள் நலன் கருதி விரைவில் வஞ்சிபாளையம் செல்வதற்கு பொதுமக்களின் கருத்து கேட்டு பொருத்தமான பாதையை ஏற்படுத்தி தர வேண் டும். இதுகுறித்து பிரபாகரன் கூறுகை யில், 15 வருடங்களுக்கு முன்பு 83 சைட்டுகள் பிரித்து விற்பனை செய் யப்பட்டது. அன்று முதல் இப்பகுதி மக்கள் ரயில்வே பாதையை தான் பயன்படுத்தி வந்தனர். இந்தப் பாதை நிரந்தரமாக இருக்கும் என்று நம் பியே, இங்கு இடம் வாங்கினோம். தற் போது, ரயில்வே பாதையை அடைத் துவிட்டனர். இப்பகுதி இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள் ளிகளில்தான் படிக்கின்றனர். அவர் கள் ரயில்வே வழித்தடத்தில் பள் ளிக்கு செல்ல அரை கிலோ மீட்டர் தான் ஆகும். தற்போது 5 கிலோ மீட் டர் சுத்தி செல்ல வேண்டியுள்ளது என் றார். இதுகுறித்து பத்மாவதி கூறுகை யில், ரயில்வே வழித்தடத்தை அடைத்ததால் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இப்பகுதி யில் இருந்த பனியன் கம்பெனிகளை காலி செய்துவிட்டு வேறு இடத் திற்கு சென்று விட்டனர். சொந்த வீட் டில் குடியேறிய நபர்கள் மட்டுமே இப்பகுதியில் இருந்து வருகிறோம். வாடகைக்கு வந்த நபர்கள் எல்லோ ரும் காலி செய்து விட்டுனர். வீடு கட்டி வாடகைக்கு விட்டவர்களின் வரு வாய் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்க ளின் வாழ்வாதாரமே தற்பொழுது கேள்விக்குறியாகிவிட்டது. அதே போல இப்பகுதியில் சாக்கடை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். இதற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என் றார். தேவராஜன் என்ற நபர் கூறுகை யில், இப்பகுதியில் ஆறு வருடங்க ளாக இருந்து வருகிறோம். அன்றாட தேவைகளுக்குசென்று வர ரயில்வே பாதை பொருத்தமான பாதையாக இருந்தது. பாதை அடைக்கப்பட்ட தால் 12 லைன் வீடுகள் ஒட்டுமொத்த மாக காலி செய்துவிட்டு வேறு இடத் திற்கு சென்று விட்டனர். வாடகைக்கு குடி இருந்தவர்கள் எளிதில் காலி செய்துவிட்டனர். சொந்த வீட்டு வைத் திருப்போர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர் என்றார்.