அவிநாசி,செப்.3 அவிநாசி பேரூராட்சியில் சாலை, சுற்றுச் சுவர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கக் கோரி பேரூராட்சி செயல் அலுவல ரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட் சிக்கு உட்பட்ட கஸ்தூரிபாய் வீதி பள்ளி யின் அருகில் உள்ள சாலை அகலப்படுத்தி தார் சாலை அமைக்க வேண்டும். பள்ளியின் பின்புறம் புதிதாக சாக்கடை அமைத்து தர வேண்டும். பழுதடைந்துள்ள சாலைகளை புதுப்பித்து தர வேண்டும். அரசு பள்ளிக்கு சுற் றுச்சசுவர் அமைத்து தர வேண்டும். கங்கவர் வீதி மற்றும் கஸ்தூரிபாய் வீதிகளில் உள்ள சாக்கடை கால்வாயில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். குடிநீர் விநியோ கத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவிநாசி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். அவிநாசி வடக்கு கிளை சார்பில் நடைபெற்ற மனு அளிக்கும் இயக்கத்தில், கட்சியின் ஒன்றிய செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் ஆர்.வேலுச்சாமி ஆர்.பழனிச்சாமி, ஏ.ராஜன், கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பி.கனகராஜ், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் வி.தேவி, கிளைச் செயலாளர் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.