அடிப்படைப் பிரச்சனைகளை நிறைவேற்ற சிபிஎம் கவுன்சிலர் கோரிக்கை
அவிநாசி, மே 24 – அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் அடிப்படை பிரச்சனைகளை நிறைவேற்றித் தரும்படி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியத் தலை வர் ஜெகதீசன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துசாமி பேசுகையில், ஊராட்சிகளில் பாதை அமைப் பது, குட்டை அமைப்பது போன்ற நல்ல காரியங்க ளுக்கு இலவசமாக அரசாங்கத்திற்கு விவசாயிகள் நிலத்தை ஒப்படைக்கின்றனர். இதனை சரிவர வருவாய்துறை கண் டுகொள்ளாததால், பொதுமக்களுக்கு பாதையில் நடப்ப தற்கு பாதிப்பு ஏற்படுகிறது. கணியாம்பூண்டி ஊராட்சி, புதுப் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் சாக்கடை வசதி செய்து கொடுக்க வேண்டும் என கூறினார். இறுதியாக வட்டார வளர்ச்சி அலுவலர் விரைவில் தங்கள் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என தெரிவித்தார்.
ரூ. 2.40 கோடிக்கு பருத்தி ஏலம்
தாராபுரம், மே 24- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமார் ரூ. 2.40 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், மூல னூர் ஒழுங்குமுறை விற்ப னைகூட முதுநிலை செயலா ளர் சுரேஷ்பாபு வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, மூலனூர் ஒழுங் குமுறை விற்பனைக்கூடத் தில் பருத்தி விற்பனை மறை முக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கருர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த 1165 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில், அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன் றிற்கு ரூ. 8 ஆயிரத்து 276 க்கும், குறைந்தபட்ச விலை யாக ரூ. 6 ஆயிரத்து 200 க்கும், சராசரி விலையாக ரூ. 7 ஆயிரத்திற்கும் விலை ஆனது. மொத்தம் 10 ஆயி ரத்து 759 மூட்டைகள் 3 ஆயி ரத்து 445 குவிண்டால் பருத்தி ரூ.2 கோடியே 39 லட்சத்து 23 ஆயிரத்து 920 க்கு விற்ப னையானது. இந்த ஏலத்தில் 29 வணிகர்கள் பங்கேற்ற னர். ஏலத்திற்கான ஏற்பாடு களை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
உதகையில் தூய்மைப்பணி
உதகை, மே 24- நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125 ஆவது மலர் கண்காட்சியை அடுத்து, உதகமண்டலம் நகராட்சி சார்பாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஊட்டியில் கோடை விழாவை முன்னிட்டு பல்லாயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து கொண்டி ருக்கின்றனர். இயற்கையின் வரமாக உள்ள உதகமண்டலத் தின் சூழலியலை பாதுகாப்பதில் மாவட்ட நிர்வாகம் பெரும் அக்கறை எடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகள் வருகையை யொட்டி, குப்பைகள் அதிகரித்து காணப்படுகிறது. இத னையடுத்து, உதகமண்டலம் நகராட்சியின் சார்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், நாள் ஒன்றுக்கு ஆறு டன் குப்பைகள் மீதம் ஐந்து நாட்களுக்கு 30 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. இதனை நூறு தூய்மை பணியாளர் கள் கொண்டு தூய்மை பணியினை மேற்கொள்ளப்பட்டது.
சேலம்: 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
சேலம், மே 24- சேலத்திலுள்ள செங்கல் மற்றும் மரம் அறுக்கும் ஆலைகளில் இருந்து 5 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர். சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமை யில், சேலம் மாவட்ட ஆள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல் துறை, சைல்டு லைன் கள அலுவலர்கள், காவல் துறையினர், வட்டாட்சி யர், தொழிலாளர் துறை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய குழுவினர் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட னர். அயோத்தியாபட்டிணம், தைலானூர், வலசையூர், சின்ன வீராணம் மற்றும் குப்ப னூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரிசி ஆலை களில் கொத்தடிமை தொழிலாளர், குழந்தை தொழிலாளர், வளரிளம் பருவத் தொழிலா ளர்கள் உள்ளனரா? என்று ஆய்வு செய்யப் பட்டன. இதில் செங்கல் சூளை மற்றும் மரம் அறுக்கும் ஆலையில் பணிபுரிந்த 5 குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத் தொழி லாளர்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர். தொடர்ந்து தொழிலக பாதுகாப்பு துணை இயக்குநர் மூலம் தொடர் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 18 வயதுக்குட் பட்ட வளரிளம் பருவத்தினர்களை பணிக்கு அமர்த்துவது குற்றமாகும். அவ்வாறு பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் உரிமை யாளர் மீது 6 மாத காலம் சிறை தண்டனை யும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் அபரா தம் விதிக்கப்படும் என அதிகாரிகள், ஆலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த னர்.
பள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு
சேலம், மே 24- இயக்குவதற்கு தகுதி யில்லாத 20 பள்ளி வாகனங் கள் தகுதியிழப்பு செய்யப் பட்டுள்ளது. ஆத்தூர் வட்டார பகுதி யில் உள்ள அனைத்து தனி யார், நர்சரி, மெட்ரிக், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வாகனங்களை ஆண்டுதோறும் ஆத்தூர் வட் டார போக்குவரத்து அதிகாரி கள் ஆய்வு செய்வது வழக் கம். இந்த வகையில், ஆத் தூர் வட்டாரத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி மணிவிழுந் தான் கிராமத்தில் நடை பெற்றது. வருவாய் கோட் டாட்சியர் சரண்யா தலைமை யில் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகரா ஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர் தி. செல்வகுமார் மற்றும் பணியாளர்கள் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய் தனர். இதில், ஆத்தூர் வட் டாரத்தில் மொத்தம் உள்ள தனியார் பள்ளிகளுக்கான 497 வாகனங்களில் 415 வாக னங்கள் ஆய்வுக்கு உட்பட் படுத்தப்பட்டன. இவற்றில் 20 பள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டன.
சிறுமி முகத்தில் கேக் பூசி அடாவடி சிறுவன் உட்பட 4 பேர் கைது
கோவை, மே 24- கோவையில் சிறுமியின் முகத்தில் கேக் பூசி அடாவடி செய்த சிறுவன் உட்பட 4 பேரை வன்கொடுமை சட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோவை, குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அப்பகுதி யில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கோயில் முன்பு சில வாலிபர்கள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதாக தெரி கிறது. அவர்கள் சிறுமியை பார்த்தவுடன் அவரை கிண்டல் செய்து, அவரது முகத்தில் கேக் பூசி அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிலர் சிறுமியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ள னர். இது தொடர்பாக சிறுமி குனியமுத் தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், சிறுமியிடம் அடாவடியில் ஈடுபட் டது குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயில் தெருவை சேர்ந்த அபிஷேக் (21), அவரது தம்பி சஞ்சீவ் (19), குனியமுத்தூர் குட்டப்பன் கடை பகுதியை சேர்ந்த சந்தோஷ் (20) மற் றும் 16 வயது சிறுவன் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேர் மீதும் போலீ சார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத் தில் வழக்குப்பதிந்து கைது செய்து விசா ரித்து வருகின்றனர்.
கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது
நாமக்கல், மே 24- கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே தீப்பற்றி எரிந்தது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டிற்கு ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து, கிரானைட் கல் ஏற்றி கொண்டு லாரி ஒன்று புதனன்று, திருச்செங்கோடு புதிய பேருந்து நிலை யம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது லாரி பின் பக்க டயர் திடீரென வெடித்து டீசல் டேங்க் தீப்பற்றி எரிந்தது. மக்கள் அடர்த்தியாக நடமாடும் பகுதியில் பலத்த சத்தத்துடன் லாரி திடீரென தீ பிடித்து எரிந்ததால், அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். மேலும், லாரிக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனம் ஒன்றும் தீப்பிடித்து எரிந்தது. லாரி உரிமையாளர் ராமச்சந்திர நாயுடு ஓட்டுநர் சரவணன் இருவரும் லாரி இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். பின்னால் இரண்டு சக்கர வாக னத்தில் வந்த பால் மடை பகுதியை சேர்ந்த நரசிம்மா மற்றும் அவரது மனைவி சரஸ்வதி இருவரும் லாரியின் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தால், எரியும் டீசல் இவர்களது வண்டிமேல் விழுந்ததால் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில், கணவன், மனைவி இருவரும் லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, திருச்செங்கோடு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத் தனர்.
மரத்தில் மோதிய கார் தீப்பிடித்தது
கோவை மாவட்டம், கண்ணம்பாளையத்திலிருந்து சூலூர் நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந் தது. அந்த காரில் முத்து கவுண்டன்புதூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பயணித்துள்ளார். அவரது ஓட்டுநர் காரை ஓட்டி வந் துள்ளார். அப்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று சென் றுள்ளது. இதனால், நாய் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் இடது புறமாக காரை திருப்பி உள்ளார். இதில் கார் நிலைத் தடுமாறி அருகே இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இத னால் காரின் இன்ஜின் பகுதியில் தீ பற்றியது. சுதாரித்துக் கொண்ட ரமேஷ் மற்றும் அவரது ஓட்டுநர் காரில் இருந்து உட னடியாக வெளியேறினர். இதுகுறித்து சூலூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு ரமேஷ் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம் பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சிய டித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர் பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
கோவை: குழந்தை தொழிலாளி மீட்பு
கோவை, மே 24- கோவையில் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் ஓட் டல்களில் சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதை தடுக்க அதி காரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பேக்கரியில் சிறுவனை பணிக்கு அமர்த்தியுள்ளதாக குழந்தைகள் நல திட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சிறுவனை பணிக்கு அமர்த்தியது தெரிய வந்தது. சிறுவனை மீட்ட அதிகாரிகள் இது குறித்து காட்டூர் போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில், போலீசார் குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் பேக்கரி உரிமையாளர் முகமத் அலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமண கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி
சேலம், மே 24- வாழப்பாடி அருகே திருமணம் முடிந்த கையோடு, படிப் புக்கு முக்கியத்துவம் கொடுத்து, தேர்வு எழுதிய மாண விக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த மின்னாம் பள்ளி பகுதியைச் சேர்ந்த தமிழ் இலக்கியா. இவர், பருத்திக் காடு பகுதியில் உள்ள சேலம் கிறிஸ்துவ கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை ஆங்கிலம் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு ஆனந்த் என்பருடன் நிச் சயிக்கப்பட்டு, புதனன்று திருமணம் நடைபெற்றது. அதேசம யம் புதனன்று தமிழ் இலக்கியாவிற்கு, ஆங்கிலம் மொழி டீச்சிங் மற்றும் ஐசிடி பாடத்தேர்வு நடைபெற்றுள்ளது. இத னால், திருமணம் முடிந்தவுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளாமல், திருமண கோலத்தில் புதனன்று காலை 10 மணியளவில் தேர்வுக்கு வந்துள்ளார். இதைப்பார்த்த சக மாணவிகள், ஆசிரியர்கள் ஆச்சரியத்துடன் மாணவி தமிழ் இலக்கியாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடிந்த கையோடு, மாணவி தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.45 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
நாமக்கல், மே 24- ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற் பனை சங்கத்தின் கிளை நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடை பெறுவது வழக்கம். அதன்படி செவ்வாயன்று மஞ்சள் நடை பெற்ற மஞ்சள் ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக் கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பப்பட்டி, புதுப்பட்டி, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். விரலி ரகம் மஞ்சள் 800 மூட்டைகளும், உருண்டை ரகம் மஞ்சள் 250 மூட்டைகளும், பனங்காலி ரக மஞ்சள் 50 மூட்டைகளும் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஏலத்தில் விரலி ரகம் ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 989 முதல் ரூ.8 ஆயிரத்து 899 வரையிலும், உருண்டை ரகம் ரூ.5 ஆயிரத்து 442 முதல் ரூ.6 ஆயிரத்து 959 வரையிலும், பனங்காலி ரகம் ரூ.8 ஆயிரத்து 369 முதல் ரூ.12 ஆயிரத்து 869 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 1,100 மஞ்சள் மூட்டைகள் ரூ.45 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதி காரிகள் தெரிவித்தனர்.
சாலையில் குட்டிகளுடன் யானை உலா
கோவை, மே 24- ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் புலி, மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் உணவு மற்றும் தண் ணீருக்காக வனவிலங்குகள் வனத்தை விட்டு, வெளியேறி வருகிறது. இந்நிலையில், ஆழியார் - வால்பாறை சாலை யில் 20க்கும் மேற்பட்ட யானைகள், கூட்டமாக குட்டிகளு டன் உலா வருகின்றன. கோடை விடுமுறையில் ஆழியார் மற்றும் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யானை கூட்டத்தை கண்டு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வரு கின்றனர். அதேசமயம் ஆபத்தை உணராமல் அலட்சியமாக சுற்றுலா பயணிகள் செயல்படக்கூடாது. வனவிலங்குக ளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது. இதனை மீறுபவர் கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொள்ளை முயற்சி
ஈரோடு, மே 24- ஈரோடு, நசியனூர் பகுதி யைச் சேர்ந்தவர் கணேசன் (65). இவரின் உறவினர் வீடு அப்பகுதியில் உள்ளது. கணே சனின் உறவினர் வீட்டை பூட்டிவிட்டு கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு வெளிநாடு சென்று விட்டார். இந்நிலை யில், கணேசன் அந்த வீட்டுக் குச் சென்று பார்த்தார். அப் போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறி கிடந் தன. இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.