districts

img

ஜாபர்கான் பேட்டையில் சிபிஎம் பிரச்சாரம்...

தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு செவ்வாயன்று (ஏப்.16) ஜாபர்கான் பேட்டையில் சிபிஎம் சார்பில் வீடுவீடாக வாக்கு சேகரிப்பு நிகழ்வு நடைபெற்றது. பிரச்சாரத்தை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.சுந்தர் தொடங்கி வைத்தார். சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் ரா.பாரதி, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில பொருளாளர் ஒய்.இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் கே.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.