திருப்பூர், ஜூலை 8- திருப்பூர் மாநகராட்சி 57 வது வார்டுக்கு உட்பட்ட திருக்கு மரன் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தருமாறு மாநகராட்சி மேயரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரில் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் திங்களன்று மேயர் ந.தினேஷ் குமாரிடம், மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் பா.லட்சுமி, தெற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், திருக்குமரன் கிளைச் செயலாளர் எம்.சுப்பிரமணியம் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். இதில் திருக்குமரன் நகரில் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும், வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், காளி குமாரசாமி கோவி லில் இருந்து வள்ளலார் நகர் வரை செல்லும் சாலை குறுகலாக உள்ளதால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும், கழிவு நீர் வடிகால் அமைக்க வேண்டும், இப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் போக்குவரத்து வசதிக்கு அரசு பேருந்து சேவையை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொண்டனர். அப்போது துணை மேயர் ஆர். பாலசுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெய பால் ஆகியோர் உடன் இருந்தனர்.