districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நத்தம் புறம்போக்கு நிலத்தில்  பத்திரப்பதிவு செய்ய சிபிஎம் கோரிக்கை

அவிநாசி, மே 17- நத்தம் புறம்போக்கு நிலங்கள், வீட்டு மனைகள் மற்றும் வீடுகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு ஆவ ணம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி வெள்ளியன்று திருப்பூர் மாவட்ட  ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது: திருப்பூர் மாவட்டம், அவிநாசி சார்  பதிவாளர் அலுவலகத்தில் கடந்த இரண்டு  வருடங்களுக்கு மேலாக நத்தம் புறம் போக்கு நிலங்கள், வீட்டுமனை இடங்கள் மற்றும் வீடுகளை பதிவு செய்ய முடியாதபடி பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.  அவிநாசி தாலுகாவில் உள்ள 31 ஊராட் சிகள், அவிநாசி பேரூராட்சி மற்றும் திருமு ருகன் பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிக ளில் நத்தம் புறம்போக்கு நிலங்கள் ஏராளமா னோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால் புதிய சொத்துக்களை வாங்க முடியாமலும், விற்க முடியாமலும், வங்கிகளில் வீட்டுக் கடன் பெற முடியாமலும் பொதுமக்கள் மிக வும் தவிப்புக்கு உள்ளாகின்றனர்.  மேலும், நத்தம் புறம்போக்கு நிலங்கள் பதிவு செய்யப்படாததால் வங்கிகளில் கடன்  பெற்று வீடு கட்ட நினைப்பவர்கள், திரும ணம், காதுகுத்து, வளைகாப்பு போன்ற விழாக்களுக்கு அடமான கடன் பெறலாம் என  திட்டமிட்டவர்கள், இனி என்ன செய்வ தென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்ற னர். எனவே நத்தம் புறம்போக்கு நிலங்கள், வீடுகள், வீட்டு மனைகள் ஆகியவற்றை பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி தாலுகா குழு சார்பில் கேட்டுக் கொண்டனர். முறைகேடு விசாரணை நடத்துக!  மேலும், அவிநாசிலிங்கம்பாளையத் தில் உள்ள பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.7  கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற் றுள்ளதாக செய்தி வருகிறது. இங்கு 9000  பேர் கணக்கு வைத்துள்ளனர். 36 கோடி ரூபாய்க்கு மேல் வைப்புத்தொகை வைத் துள்ளதாக அறிய முடிகிறது. இந்நிலையில் இங்கு நடைபெற்ற முறைகேட்டுக்கும் சங்க  நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லை என்பது  போல் நடந்து கொள்கின்றனர். நிர்வாகத் தின் தொடர்பில்லாமல் முறைகேடு நடை பெற்று இருக்க வாய்ப்பு இல்லை. எனவே பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டு றவு சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி இதில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஈஸ்வர மூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.

அமித்ஷா தீவிரவாத பேச்சு; கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்

திருப்பூர், மே 17- பசுவதை செய்தால் தலை கீழாக தொங்க  விடுவோம் என அமித்ஷா தீவிரவாதமாக பேசுகிறார். ஆனால் தேர்தல் ஆணையம் இதை கண்டுகொள்ள மறுக்கிறது என்று  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெ ருந்தகை கூறினார். திருப்பூரில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ்  கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற செல்வபெ ருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: மோடி  ஆட்சியில் எல்லா துறையும் வீழ்ச்சி அடைந் திருக்கிறது. இப்போது அவர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். தேர்தல் கூட்டங்களில் அமித்ஷா வின் பேச்சு தீவிரவாத பேச்சாக உள்ளது. பசுவதை செய்தால் தலைகீழாக தொங்க விடுவோம் என்கிறார் அமித்ஷா. ஆனால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கா மல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. தேசிய நெடுஞ்சாலை விபத்துகள் நாளுக்கு நாள் கூடிவருகிறது. மோடி ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை தோல்வியை தழுவி உள்ளது. அவர்கள் ஏன் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய தேசத்தில் சட்டத்தை  மதிக்காமல் பாசிச ஆட்சி நடத்தி வரும் மோடி,  அமித்ஷா மீது கூட நாங்கள் புல்டோசரை விட மாட்டோம். ஆனால் சாதாரண மக்கள் மீது  புல்டோசரை விடும் பாஜகவின் அரசியல் குவாலிட்டி அவ்வளவுதான். மூன்றாம் கட்ட தேர்தல் முடிந்த பின்னர் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று பேசுவதை மோடி விட்டுவிட்டார். மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு  செய்து விட்டார்கள். ராகுல் காந்தி பிரதம ராக வருவார் என்றார்.

காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் சோதனை!

காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் சோதனை! கோவை, மே 17- தனியார் பேருந்துகள் ஏற்படுத்தும் தொடர் விபத்து களின் எதிரொலியால், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல் துறையினர் சோதனை மேற்கொண் டனர். கோவை, காந்திபுரம் மாநகரப் பேருந்து நிலையத்தில்  கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாலை 5 மணி அளவில்  பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது தனியார் நகர  பேருந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு பேருந்து  மீது மோதி நின்றது. அதில் பேருந்துக்காக காத்திருந்த 8  பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், புதனன்று  தனியார் பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.  மேலும், தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கள் போதையில் வாகனங்களை இயக்குவதாக தொடர்ந்து  குற்றச்சாட்டு எழுந்து வந்தது. மேலும், இதனால், உரிய நேரத்தில் பேருந்தை இயக்காமலும், மற்ற பேருந்து ஊழியர்க ளோடு தகராறில் ஈடுபடுவது, அதிவேகமாக வாகனங்களை இயக்குவது என்பது தொடர் நிகழ்வாக உள்ளது.  இதனையடுத்து, அரசு மற்றும் போக்குவரத்து துறையி னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக் கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மாநகரப்  பேருந்து நிலையத்தில் விபத்துக்கள் மற்றும் அடிதடி போன்ற தகராறுகளை தடுக்கும் விதமாக போக்குவரத்துக் காவல் துறையினர் தனியார் பேருந்துகளின் ஓட்டுநர், நடத்து னர்களை சோதனை மேற்கொண்டனர்.

பவானியாற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!

மே பாளையம், மே 17- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் தில் பவானி ஆற்றில் மூழ்கி இளைஞர் பரிதா பமாக பலியானார். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறு முகை பகுதியில் வசித்து வருபவர் சங்கர்(21).  இவர், தனது நண்பரான தினேஷ்குமாருடன் வெள்ளிப்பாளையம் சாலை கருப்பராயன் கோவில் அருகே ஓடும் பவானியாற்று பகு திக்கு வந்துள்ளார். பின்னர் இருவரும் ஆற் றில் இறங்கி குளித்த போது சங்கர் ஆழமான  பகுதிக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதில் சங்கர் ஆற்று நீரில் மூழ்கி பரிதா பமாக பலியானார். உடனிருந்த தினேஷ்கு மார் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை அழைத்த நிலையில், தகவல் மேட்டுப்பா ளையம் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள்  நீரில் மூழ்கி இறந்து கிடந்த சங்கரின் உடலை  மீட்டு உடற்கூறாய்விற்காக மேட்டுப்பாளை யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளை யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் - எச்சரிக்கை

உதகை, மே 17- நீலகிரி மாவட்டத்தில் அதி கன மழை காரணமாக சுற்றுலா பய ணிகள் 18,19, 20 ஆகிய தேதிகளில் முடிந்தவரை பயணத்தை தள்ளிப் போட வேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரி வித்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை காலம்  தொடங்கியது முதலே பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து  வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்கள் நல்ல மழை பதி வாகி வரும் நிலையில், அடுத்த 5  நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என  வானிலை மையம் தெரிவித்துள் ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு 18 மற்றும் 19 ஆம்  தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட் டுள்ளது. 20 ஆம் தேதி அதிகன மழை காரணமாக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.  அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை இருக் கும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் பயணத்தை ஒத்தி வைக்கும் படி  நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவு றுத்தியுள்ளார். அல்லது பாது காப்பு ஏற்பாடுகளுடன் பயணத்தை  திட்டமிடும்படி கேட்டுக்கொண்டுள் ளார். மேலும், மாவட்டத்தில் பேரி டர் தடுப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் தயார் நிலை யில் உள்ளதாகவும் தெரிவித்துள் ளார்.

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் கோவை, மே 17- பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை  நீதிமன்ற காவலில் வைக்க, கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ரெட் பிக்ஸ் என்ற பெயரில் டிஜிட்டல் ஊடக நிறுவனம் நடத்தி வரும் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர், கடந்த சில  நாட்களுக்கு முன்பு சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டார். அதில் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த நிலையில், அது எவ்வித தணிக்கையும் இன்றி வெளியிடப்பட்டது. இந்த நிலை யில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்தனர்.  இதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் பின்னர், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு தற் போது திருச்சி லால்குடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி சிறையில் இருந்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் பெண் காவலர்கள் பாதுகாப்புடன், வெள்ளி யன்று கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 5ல் நீதிபதி வி.எல் சந்தோஷ் முன்பு நேர் நிறுத்தப்பட்டார்.   வழக்கை விசாரித்த நீதிபதி வி.எல்.சந்தோஷ், பெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை நீதிமன்ற  காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதை அடுத்து  பெண் காவலர்கள் பாதுகாப்புடன் பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட் டார்.

மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு நாமக்கல், மே 17- குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள  குள்ளநாயக்கன்பாளையம், சானாங்காடு தோட்டம் பகுதி யைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் யூகலிப்ஸ்ட் மரங்களையும் வளர்த்து வந்தார். அந்த மரங்கள், அருகில் செல்லும் மின்சார கம்பி களில் உரசியபடி இருந்ததால் அந்த மரங்களை அகற்றுவ தற்காக தங்கவேலின் மனைவி சரஸ்வதி மரங்களின் கிளைகளை இரும்பு கம்பி கொண்டு வெட்டினார். அப்பொ ழுது எதிர்பாராத விதமாக மின் கம்பி மீது இரும்பு கம்பி பட்டதால் சரஸ்வதி மீது மின்சாரம் பாய்ந்தது. அவரது அல றல் சத்தம் கேட்டு தங்கவேல் ஓடி சென்று அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம்  பாய்ந்து, இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இருவரின் சடலங்களையும் மீட்டு  பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

அடிமனை பயனாளிகளை  அமைப்பாக அணி திரட்ட முடிவு 

அடிமனை பயனாளிகளை  அமைப்பாக அணி திரட்ட முடிவு  திருப்பூர், மே 17- தமிழ்நாடு அறநிலையத்துறை, வஃக்பு வாரிய இடங்களில் இருக்கும் அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகளை அமைப்பு ரீதியாக அணி திரட்டுவது என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயி கள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூர் மாவட்டக்குழு கூட்டம்  துணைத் தலைவர் நடராஜ் தலைமையில் வியாழனன்று பல்ல டம் விவசாயிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாநி லத் தலைவர் வ.செல்வம், மாநிலக்குழு முடிவுகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் அறநிலையத்துறை, வஃக்பு வாரியம்  பயனாளிகளுக்கு செய்யும் இடையூறுகளில் இருந்து மீட்டெ டுப்பது குறித்தும், அமைப்பாக திரட்ட வேண்டிய அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.  சங்கத்தின் நடவடிக்கைகளை பலப்படுத்தும் பொருட்டு உறுப்பினர் பதிவு சேர்ப்பது, பகுதி அளவில் கூட்டங்கள் நடத்துவது, கிளை அமைப்பை ஏற்ப டுத்துவது உள்ளிட்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. இக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.குமார்,  சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வெங் கட்ராமன் உள்ளிட்ட மாவட்ட குழு உறுப்பினர்கள், பயனாளி கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பட்டாசு குடோனில் விபத்து: ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்

சேலம், மே 17- ஆத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலைக்கு சொந்தமான குடோனில் ஏற்பட்ட வெடி விபத் தில் தொழிலாளி ஒருவர் உயிரி ழந்தார். 2 பேர் காயமடைந்து மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கடம்பூர் அரசன் கோயில் காடு பகுதியில் தனசேகரன் என்ப வருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இங்கு பொட் டாசியம் நைட்ரேட் அலுமினியம் பவுடர், சல்பர் பவுடா் ஆகியவை தலா 3 கிலோ இருப்பு வைத்துள் ளார். பட்டாசு தயார் செய்வதற் காக கிடங்கில் சென்று மூலப் பொருளை எடுத்து வரச்சென்ற போது வெடி விபத்து நடைபெற் றுள்ளது. இந்த விபத்தில் கிடங்கில் வேலை செய்து கொண்டிருந்த ராஜமாணிக்கம் (45) என்பவர் உயிரிழந்தார். இவ்விபத்தில் வெடி பொருட்கள் இருந்த கிடங்கு கட்ட டம் முழுவதும் வெடித்துச் சிதறி யது. கட்டடத்தின் பாகங்கள் அரு கிலிருந்த மற்றொரு கட்டடத்தின் மேல் விழுந்ததில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த விஜயா (30), சந்தியா (30) ஆகியோர் காய மடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல் துறையினர் காயமடைந்த வர்களை மீட்டு, சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடி விபத் தில் உயிரிழந்த ராஜமாணிக்கத் தின் உடல் பிரேதப் பரிசோதனைக் காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து மேற் கொண்ட முதற்கட்ட விசாரணை யில், வெடி விபத்து நடந்த ஆலை யின் உரிமம் கடந்த 31.3.2024 ஆம்  தேதியுடன் முடிவடைந்து விட்டது. உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப் பம் தாக்கல் செய்யப்பட்டு காவல் துறை விசாரணை முடிவுற்று கோப்பு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நிலுவையில் இருப்ப தும் தெரிய வந்தது. இவ்விபத்து குறித்த தகவலறிந்து உயிரிழந்த  ராஜமாணிக்கத்தின் உறவினர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இதனால் அப்ப குதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.