கோவை, ஆக. 7- கோவை மாநகராட்சி பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு குறைந்த பட்ச கூலி வழங் கக்கோரி வஉசி மைதா னத்தில், மாநகராட்சி பகுதி யில் குப்பை சேகரிக்கும் வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்கள் திடீர் போராட் டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சி யில் பணி புரியும் தூய்மை பணியை மேற்கொள்ளும் ஓட்டுநர்களுக்கு ரூ.440 வழங்கப்பட்டு வரு கிறது. அதை குறைந்தபட்ச கூலியாக ரூ.750 ஐ வழங்க கோரியும், இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்க கோரி வாகன ஓட்டுநர்கள் திங்களன்று காலை வஉசி மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட் டனர். மாநகராட்சி தங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமூக தீர்வு காணும் வரை இப் போராட்டம் தொடரும் என தூய்மை பணி ஓட்டுநர்கள் தெரிவித்தனர். குப்பைகளும் வாகனங்கள் செல்லாததால், குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. ஒரே அணியாக வ.உ.சி மைதானத்தில் தூய்மை பணியாளர்கள் ஒன்று திரண்டதால் காவல்துறையினர் குவிக் கப்பட்டனர். இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் ஓட்டுநர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர்.