districts

img

பிஎஸ்என்எல் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து திருப்பூரில் ஒப்பந்த தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.3- பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஆட்கு றைப்பு செய்வதைக் கண்டித்தும், இஎஸ்ஐ,  பிஎப் முறையாக வழங்க கோரியும் தமிழ் நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலா ளர் சங்கத்தினர் செவ்வாயன்று திருப்பூர் மெயின் தொலைப்பேசி நிலையத்தின் முன் பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநில நிர் வாகி ரமேஷ் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஒப்பந்த ஊழி யர்களை ஆட்குறைப்பு செய்வதை நிறுத்த  வேண்டும். ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும். ஊதியக் குறைவான டெண் டரை ரத்து செய்ய வேண்டும். இஎஸ்ஐ,  பிஎப் முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இப் போராட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் சங் கம், ஓய்வூதியர் சங்கம், ஊழியர் சங்க நிர் வாகிகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக,  பிஎஸ் என்எல் முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ். சுப்பிரமணியன், பிஎஸ்என்எல் ஓய்வு பெற் றோர் சங்க கிளை செயலாளர் விஸ்வநா தன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைச் செயலாளர் குமரவேல் ஆகியோர் கோரிக் கைகள் குறித்து பேசினர். இறுதியாக அவி நாசி கிளை செயலாளர் கனகராஜ் நன்றி கூறினார்.  முன்னதாக, மகாத்மா காந்தி பிறந்த நாளை நினைவு கூர்ந்து அவரது உருவப் படம் வைத்து பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.