districts

img

ஒப்புக் கொண்ட சம்பளத்தை தர மறுப்பது ஏன்? பல்லடத்தில் ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர், செப். 9 - பல்லடம் நகராட்சியில் ஒப்புக்கொண்ட சம்பளம் வழங்காததை கண்டித்து தூய்மைப்  பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகள் உள் ளன. சுமார் 56 ஆயிரம் மக்கள் நகரத்தில் வசித்து வருகிறார்கள். நகராட்சியில் ஒப்பந்த  தொழிலாளர்களாக 120 பேர் வரை தூய்மைப்  பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒப்பந்ததா ரர்கள் இந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தைக் குறைத்து வழங்கி  வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான  சம்பளம் வெள்ளியன்று வழங்கப்பட்டது. இதில் ஏற்கனவே கடந்த மாதம் வழங்கியது போலவே ரூ.420 மட்டுமே தூய்மை பணியா ளர்களுக்கு வழங்கப்பட்டது. வாகன ஓட்டுனர் களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தில் ரூ.100க்கும் மேலாக குறைக்கப்பட்டு, அவர்க ளுக்கும் ரூ.420 மட்டுமே வழங்கப்பட்டது. அதன் காரணமாக சனியன்று காலையில் பல் லடம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள்,  வாகன ஓட்டுனர்கள் பணிகளை புறக்கணித்து  நகராட்சி அலுவலகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு அரசு நிர் ணயித்த சம்பளத்தை வழங்க கோரி கடந்த  ஜூன் மாதம் முதல் பல்வேறு போராட்டங்கள்  சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக நடத்தப்பட் டது. மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலை யில், நகராட்சி மண்டல இயக்குனர், தொழி லாளர் நல அலுவலர், நகராட்சி ஆணையா ளர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை மூன்று முறை நடைபெற்றுள்ளது. தூய்மைப் பணியா ளர்களுக்கு நாள் ஒன்றுக்கு பிடித்தம் போக  ரூ.442 வழங்குவது என ஒப்பந்தம் செய்யப் பட்டது. அந்த ஒப்பந்தப்படி சம்பளம் தராமல்  குறைத்துக் கொடுத்ததால் இந்த போராட் டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த  காத்திருப்பு போராட்டத்தில் சிஐடியு ஊரக  வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன் றிய செயலாளர் ஆர்.பரமசிவம் ஆகியோர்  கலந்து கொண்டனர். பல்லடம் நகராட்சி ஆணையாளர் முத்துசாமியுடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் குறைக்கப்பட்ட  ரூ.20 தினச்சம்பளத்தை திங்களன்று தருவ தாக உறுதியளித்தனர். இதையடுத்து காத்தி ருப்பு போராட்டத்தை தொழிலாளர்கள் விலக்கிக் கொண்டு பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.