கோவை, செப்.17- கோவை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப் பட்ட நடுநிலைப்பள்ளியில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி, 76 ஆவது வார்டுக் குட்பட்ட தெலுங்குபாளைம் பகுதியில் தமி ழக அரசு அங்கீகாரம் பெற்று தனியார் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்த வைதீஸ்வரா வித்யா லயா நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி 1.95 ஏக்கர் பரப்பளவுள்ள வளாகத்தில் 7500 சதுரடி பரப்பரளவில் பள்ளி கட்டிடம் மற்றும் 0.95 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளையாட்டு மைதானத்துடன் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 266 எண்ணிக்கையிலான மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், இப்பள்ளி கட்டிடம் 72 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டதால் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இக்கட்டி டத்தினை தனியார் நிறுவனத்தின் மூலம் பரா மரிக்க இயலாததால் மாநகராட்சியிடம் ஒப் படைக்கப்பட்டது. இதையடுத்து ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் 6818 சதுரடி பரப்பளவில் 10 எண் ணிக்கையிலான வகுப்பறைகள் மற்றும் அலு வலக அறைகளுக்கான கட்டுமானப் பணி திங்களன்று துவங்கியது. மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னி லையில், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்தி ரன் திங்களன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் துணை மேயர் ரா.வெற்றி செல் வன், தெற்கு மண்டலத் தலைவர் ரெ.தன லட்சுமி, கல்விக்குழுத்தலைவர் மாலதி நாக ராஜ், மாமன்ற உறுப்பினர் ராஜ்குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.