districts

img

மிஸ்டர் தருமபுரி 2022 போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு

தருமபுரி, மார்ச் 21- மிஸ்டர் தருமபுரி 2022 போட்டியில் வெற்றி பெற்ற  தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவன் கே.தமிழனுக்கு கல்லூரி முதல்வர் ப.கி.கிள்ளிவளவன் பாராட்டு தெரிவித் தார். தருமபுரி மாவட்ட ஆணழகன் சங்கத்தின் சார்பாக ஞாயி றன்று, மாவட்ட அளவிலான மிஸ்டர் தருமபுரி 2022 ஆண ழகன் போட்டி நடைபெற்றது. இதில், தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளம் அறிவியல் ஊடகம் மற்றும் காட்சிப்பதிவியல் துறையில் பயிலும் மாணவன் கே.தமிழன் 75 கிலோ எடைப்பிரிவில்  பங்கேற்று, முதலி டம் பிடித்தார். மேலும், மார்ச் 27 ஆம் தேதியன்று ராமநாத புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். இந்நிலையில், வெற்றி பெற்ற மாணவன் தமிழனுக்கு பதக்கம், கோப்பை மற்றும் தகுதிச்சான்றிதழ்களை கல்லூரியின் முதல்வர் ப.கி.கிள்ளிவளவன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.  மேலும், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் கு.பால முருகன், காட்சிப்பதிவியல் துறைத் தலைவர் (பொ) கோ.பிர பாகரன் ஆகியோர் மாணவன் தமிழனுக்கு பாராட்டு தெரி வித்தனர். முன்னதாக, இதே மாணவன் சென்ற மாதம் சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆணழகன் போட்டிகளில் 70 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.