districts

img

சாலை அமைக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடைபயணம்

அவிநாசி, ஜூலை 15 – அவிநாசி அருகே வஞ்சிபாளையம் அடுத்து சாமந்தங்கோட்டை சாலை ஓராண் டுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்தும் இதுவரை  சாலை அமைக்காததை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வஞ்சிபாளையம் பகுதி கிளைகள் சார்பில் திங்களன்று நடை பயண போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவிநாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, சென்னிமலை கவுண்டர் நகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சாமந்தங்கோட்டையில் இருந்து சென்னிமலை கவுண்டர் நகர் பகுதி வரை  ஓராண்டுக்கு முன்பு தற்போதைய நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.ராசாவால் பணி துவக்கி  வைக்கப்பட்டது. இருப்பினும் இச்சாலைப் பணி நடைபெறாமல் இருந்தது. இதன் காரண மாக சாலைப் பணிகளை உடனடியாக துவக்க  கோரியும், சென்னிமலை கவுண்டர் நகர் பகுதி  மக்கள் பயன்படுத்த பொருத்தமான சாலையை ஏற்படுத்தி தரக் கோரியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வஞ்சிபாளையம் பகுதி கிளைகள் சார்பில் நடைபயண போராட் டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

வஞ்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அரு கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூர்த்தி தலைமையில் நடைபயணம் துவங்கியது. இந்த நடைபயணத்தை துவக்கி  வைத்து கோரிக்கைகளை விளக்கி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் கவுன்சி லர் முத்துசாமி பேசினார். இதனைத் தொடர்ந்து நடைபயணம் சிறிது தூரம் செல் லும்போது திருமுருகன்பூண்டி காவல்துறை யினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இத னைத் தொடர்ந்து  வட்டார வளர்ச்சி அலு வலர் விஜயகுமார், அரசுத்துறை சார்ந்த அதி காரிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இறுதியாக வட்டார வளர்ச்சி அலுவலர்  விஜயகுமார் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள்,  சாலைப்பணிகளை நிறைவேற்றித் தருவதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் குமரவேல், பொன்ராமபுரத்தில் அமைந்துள்ள சமுதாய  நலக் கூடத்தில் வாட்ச்மேன் நியமிக்கப்பட்ட தாகக் கூறி ஊராட்சி நிர்வாகம் மாதந்தோ றும் ரூ. 9ஆயிரம் பணம் எடுத்து வருவதாக வும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித் தார். இது குறித்தும் விசாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நடைபயண இயக்கத்தில் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ் ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றியச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், ராஜ், முருகன், மோகனசுந்தரம், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், குமர வேல், கிளைச் செயலாளர்கள் ராஜா, கதிர்வேல், ராமகிருஷ்ணன், செல்வராஜ், துரைசாமி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலா ளர் அனிபா உட்பட பலர் கலந்து கொண்ட னர்.