districts

img

தமிழக அரசை வஞ்சிக்கும் ஒன்றிய அரசிற்கு கண்டனம்

கோவை, ஜூலை 26– நிதிநிலை அறிக்கையில் தமிழ கத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து கோவை மாநகராட்சி மன்றத் தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது. கோவை மாநகராட்சி மாமன்ற சாதா ரண கூட்டம் வெள்ளியன்று துணை  மேயர் ரா.வெற்றிசெல்வன் தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணை யர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மண்டலத்  தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான  இந்தியா கூட்டணியை 39 தொகுதிகளி லும் வெற்றி பெற செய்த தமிழக மக்க ளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்த நிதி நிலை  அறிக்கையில், இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்க ணிக்கப்பட்டதற்கும்,  கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக் கீடு செய்யாத ஒன்றிய அரசை கண்டித் தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாமன்ற கூட்டத்தில் மொத்தம் 333 தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாமன்றக்குழு தலை வர் பி.இராமமூர்த்தி பேசும்போது மாந கராட்சியின் 12 ஆவது வார்டுக்குட் பட்ட காந்திநகர் பகுதியில் மழை நீர் வடிகால் கட்டுவதற்கு 2014 ஆம் ஆண்டு  மதிப்பீடு செய்யப்பட்டு ஒரு பகுதி மட் டும் கட்டி முடிக்கப்பட்டது போதிய நிதி இல்லாததால ஒரு பகுதி கட்டி முடிக்கா மலும் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து மழைநீர் வடி கால் கட்டிக் கொடுக்க வேண்டும். கடும் போக்குவரத்து நெருக்கடி உள்ள  கண பதி பகுதியில் டெக்ஸ்டூல் முதல் சூரியா  மருத்துவமனை வரை சாலை விரிவாக் கம் செய்வதற்கு அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு பெற்றமைக்கு நன்றி கூறி னார். வீட்டு உபயோக குடிநீர் கட்டணம்  ரூ.60 மற்றும் ரூ 120 என்று இருந்ததை ரூ.100 என சமச்சீர் செய்வதை கைவிட்டு பழைய முறையிலேயே தொடர வேண் டும். பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் பிஎஸ்யுபி திட்டம் மூலம் கடந்த 2010 -11 ஆண்டுகளில் குடிநீர்  இணைப்பிற்கு வெறும் 250 ரூபாய் மட் டுமே வைப்புத் தொகையாக பெற்று கொண்டு வழங்கப்பட்டது. தற்போது குடி நீர் பெறாத பட்டியலின மக்கள் குடிநீர் இணைப்பு பெறுவதற்கு 436 சதுர அடி  வரை உள்ளவர்களுக்கு இணைப்பு வழங்க வேண்டும் என்று போடப்பட்ட தீர்மானம் எந்த நிலையில் உள்ளது என்றார். தொடர்ந்து மாமன்ற உறுப்பி னர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.