districts

img

தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் திருப்பூரில் கடைப்பிடிப்பு

திருப்பூர், செப். 30 - கீழ்தஞ்சையில் பண்ணையடிமைத்தனத்துக்கு எதிராக விவசாயக் கூலித் தொழிலாளர்களையும், குத்தகை விவசாயி களையும் தட்டி எழுப்பி செங்கொடி இயக்கத்தை கட்டிய மகத் தான போராளி தோழர் பி.சீனிவாசராவின் நினைவு தினம் திருப் பூரில் கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் அவிநாசி சாலை சிஐடியு மாவட்ட அலுவலகம்  முன்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பி. சீனிவாசராவ் நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடை பெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலை வர் ச.நந்தகோபால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் நினை வேந்தல் உரையாற்றினார். இதில்  தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் வி.மகாலிங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், மாவட்ட செற்குழு உறுப்பினர் எம்.ராஜகோ பால், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அருள் உள்ளிட் டோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர். இத்துடன்  அவிநாசி செல்வபுரத்தில் நடைபெற்ற பி.சீனிவாசராவ் நினை வஞ்சலி நிகழ்ச்சியில் விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் வி.பி.முருகேசன் தலைமையில் அஞ்சலி செலுத்தப் பட்டது.  அதேபோல் திருப்பூர் வடக்கு ஒன்றியம் காளிபாளை யத்தில் தோழர் பி.சீனிவாசராவுக்கு நினைவஞ்சலி செலுத்தப் பட்டது. ஊத்துக்குளி ஆர்.எஸ்.சில் நடைபெற்ற பி.சீனிவா சராவ் நினைஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டக்குழு உறுப்பினர் கே.எஸ்.ராமசாமி, வி.தொ.ச  ஒன்றியத் தலைவர் ஆர்.மணியன் ஆகியோர் உள்பட பலர்  கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

;