districts

img

பணி நிறைவு பாராட்டு விழா

ஈரோடு, செப். 7- தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் கிளை சார்பாக, சிஐடியு  ஈரோடு மாவட்டச் செய லாளரும், ஜான்சன் &ஜான்சன் என்ற மருந்து நிறுவனத்தில் மருந்து விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற வருமான ஹெச்.ஸ்ரீராமின் பணி நிறைவுப் பாராட்டு விழா ஈரோட்டில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஈரோடு கிளைத் தலைவர் வெ.சுரேஷ்பாபு  தலைமை தாங்க,  இணைச்செயலாளர் மு.சங்கரன் வரவேற் றார். ஸ்ரீராமுக்கு சிறப்பு செய்யும் விதமாக டிஎன்எம்எஸ்ஆர்ஏ  ஈரோடு கிளையின் சார்பில் கௌரவிக்கப்பட்டார். மூத்த மருந்து விற்பனைப் பிரதிநிதித் தோழர்களின் சிறப்பித்தல் மற்றும் வாழ்த்துரைகளுக்குப் பின்னர் டிஎன்எம்எஸ்ஆர்ஏ சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.சத்திய நாராயணன், மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.விவே கானந்தன் மற்றும் அகில இந்திய மருந்து விற்பனைப் பிரதி நிதி சங்கங்களின் சம்மேளனத் தலைவர் ஆர்.ரமேஷ் சுந்தர்  ஆகியோர் ஸ்ரீராம் உடனான தம் அனுபவங்களைப் பகிர்ந்து  கொண்டனர். சிஐடியு ஈரோடு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், உதவித் தலைவர் இரா.ரகுராமன்,  தமிழ்நாடு சிறுபான்மை  மக்கள் நலக்குழு தலைவர் ப.மாரிமுத்து உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். நிறைவாக ஸ்ரீராம் ஏற்புரை வழங்கினார். முடிவில், டிஎன்எம்எஸ்ஆர்ஏ செயற்குழு உறுப்பினர் க. சரவணன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் திரளானோர் பங் கேற்றனர்.

;