districts

img

பணி நிறைவு பாராட்டு விழா

தருமபுரி, பிப்.13- பொது நூலக்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலை வர் பெ.பிரபாகரன் பணி நிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில்  தருமபுரி ரோட்டரி அரங் கில் திங்களன்று நடைபெற்றது. பெ.பிரபாகரன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தரும புரி மாவட்டத்தில்  மாவட்ட நிர்வாகியாகவும், தமிழ்நாடு பொது நூலகத்துறை பணியாளர்கள் கூட்டுறவு  சேமிப்பு கடன் சிக்கன சங்க தலைவராகவும், தமிழ்நாடு பொதுநூலகத் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவராகவும், மாநில தலை வராகவும் பணியாற்றினார்.  இவரின் பணிநிறைவு பாராட்டுவிழாவிற்கு அரசு ஊழியர் சங்கமாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை தாங்கி னார். செயலாளர் ஏ.சேகர் வரவேற்றார். இதில், மாநில  துணைத்தலைவர் கோ.பழணியம்மாள், மாவட்ட பொருளா ளர் பி.எஸ்.இளவேனில்,  பொதுநூலகத்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் முனிவரால், சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜிவா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரை யாற்றினர். நிறைவாக பெ.பிரபாகரன் ஏற்புறையாற்றினார்.